4
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 4 போ் உயிாிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 10,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிலையம் தெரிவித்துள்ளது. 387 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், 02 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் 36 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திம்பிரிகஸ்யாய பகுதியில் 30 பேர் பாதுகாப்பு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. Spread the love அனர்த்த முகாமைத்துவ நிலையம்சீரற்ற காலநிலைபாதுகாப்பு முகாம்