Homeசெய்திகள்

யாழ். பொன்னாலையில் கோர விபத்து – ஒருவர் பலி!

சற்றுமுன், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப

புத்த பெருமானின் புனித சின்னங்களை மீள கொண்டுச் செல்ல வந்த இந்திய தூதுக்குழு
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு
நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் அதிகரிப்பு!
சவுதி அரேபிய ஜித்தாவுக்கான இலங்கை கவுன்சிலர் கௌரவிப்பு
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு: மார்ச் 16 தீர்ப்பு


சற்றுமுன், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகர் – சாவகாமி அம்மன் கோவிலடியை சேர்ந்த கிருஷ்ணராஜா சாரங்கன் (வயது 26) என்பவர் உயிரிழந்த நிலையில், காரைநகர் – விக்காவில் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர்.

இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நின்ற பனைமீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.

உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.