உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

Homeசெய்திகள்

உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை, பகுதியில் இன்று (09) காலை உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அம்பலாங்கொடை நோக்கிச் சென்ற லொறியின

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு !
மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது
குடும்பிமலைப் பகுதியில் 3 கவச எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு
இத்தாலி ஒலிம்பிக் கிராமம் அருகே மோதல்களில் முடிந்தது போராட்டம்
ஹட்டனில் இ.போ.ச பேருந்தை வழிமறித்து சாரதி மீது தாக்குதல்


அம்பலாங்கொடை, பகுதியில் இன்று (09) காலை உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அம்பலாங்கொடை நோக்கிச் சென்ற லொறியின் சாரதியை, பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள், சோதனைக்காக நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.
எனினும், சாரதி பொலிஸாரின் உத்தரவைப் புறக்கணித்து, தொடர்ந்து வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
அதன்படி, பொலிஸார் லொறியை பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயன்றனர். வாகனம் தொடர்ந்து பயணித்த நிலையில், பொலிஸார லொறி மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனையடுத்து மேற்கொண்ட சோதனையின் போது, லொறிக்குள் 10 கால்நடைகள் மற்றும் நான்கு எருமைகள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இதற்கிடையில், இரண்டு சந்தேக நபர்கள் 5,200 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 42 மற்றும் 46 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அக்குரெஸ்ஸ மற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லொறியின் சாரதியும் மற்றொரு சந்தேக நபரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் அவர்களைக் கைது செய்ய அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

COMMENTS