தற்போதைய அரசாங்கத்தை  இந்நாட்டு மக்கள் மிக விரைவில் வெறுத்து ஒதுக்குவார்கள் –  முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியால் நிஷாந்த

Homeசெய்திகள்Design

தற்போதைய அரசாங்கத்தை இந்நாட்டு மக்கள் மிக விரைவில் வெறுத்து ஒதுக்குவார்கள் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியால் நிஷாந்த

நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினரின் கௌரவத்தைப் பாதுகாக்கத் தவறியுள்ள தற்போதைய அரசாங்கத்தை, இந்நாட்டு மக்கள் மிக விரைவில் வெறுத்து ஒதுக்குவார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியால் நிஷாந்த தெரிவித்தார். இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் பிரியால் நிஷாந்த இவ்விடயம் குறித்துத் மேலும் தெரிவிக்கையில், இன்று இந்த நாடு ஒரு மயான பூமியாகவோ அல்லது இரத்த ஏரியாகவோ மாறாமல் இருப்பதற்குக் காரணம் எமது இராணுவத்தினரும், அவர்களுக்குத் தலைமைத்துவம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். அவர்கள் இட்ட அடித்தளத்தினாலேயே நாடு இன்று இந்த நிலையை எட்டியுள்ளது. இருப்பினும், தற்போதைய அரசாங்கம் எமது இராணுவத்தினரை கௌரவமான முறையில் அழைக்கக்கூடத் தயங்கி, அவர்களை வெறும் 'சிப்பாய்கள்' என விளிப்பது மிகுந்த கவலைக்குரியது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரையோ அல்லது எமது இராணுவத்தினரின் கௌரவத்தையோ உலகிற்குப் பறைசாற்ற இந்த அரசாங்கம் முன்வரவில்லை. அரசாங்கத்தில் உள்ளவர்கள் சிலர் தமது இயலாமையை ..

வாய்வெடிகுண்டு உட்கொண்ட யானை உயிரிழப்பு
உலர்ந்த கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது !
யோஷித மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !
டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு !
புத்தரின் ஊர்ணாவை திருடிய இருவர் கைது

நாட்டைப் பாதுகாத்த இராணுவத்தினரின் கௌரவத்தைப் பாதுகாக்கத் தவறியுள்ள தற்போதைய அரசாங்கத்தை, இந்நாட்டு மக்கள் மிக விரைவில் வெறுத்து ஒதுக்குவார்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியால் நிஷாந்த தெரிவித்தார்.
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் பிரியால் நிஷாந்த இவ்விடயம் குறித்துத் மேலும் தெரிவிக்கையில்,
இன்று இந்த நாடு ஒரு மயான பூமியாகவோ அல்லது இரத்த ஏரியாகவோ மாறாமல் இருப்பதற்குக் காரணம் எமது இராணுவத்தினரும், அவர்களுக்குத் தலைமைத்துவம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். அவர்கள் இட்ட அடித்தளத்தினாலேயே நாடு இன்று இந்த நிலையை எட்டியுள்ளது.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் எமது இராணுவத்தினரை கௌரவமான முறையில் அழைக்கக்கூடத் தயங்கி, அவர்களை வெறும் ‘சிப்பாய்கள்’ என விளிப்பது மிகுந்த கவலைக்குரியது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரையோ அல்லது எமது இராணுவத்தினரின் கௌரவத்தையோ உலகிற்குப் பறைசாற்ற இந்த அரசாங்கம் முன்வரவில்லை.
அரசாங்கத்தில் உள்ளவர்கள் சிலர் தமது இயலாமையை மறைக்கப் பல்வேறு கருத்துக்களைக் கூறுகின்றனர். இராணுவத் தளபாடங்கள் மற்றும் வாகனங்கள் கடனுக்கும் உதவித் திட்டங்களின் கீழும் பெறப்பட்டவை என்பதால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என அவர்கள் கூறுவார்களானால், தற்போதைய ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சுக்களில் உள்ள பௌதீக வளங்கள் பலவும் அவ்வாறு பெறப்பட்டவையே. அவற்றையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.
அநாவசியமான கருத்துக்களைக் கூறி மக்களின் அதிருப்திக்கு உள்ளாவதை விடுத்து, இராணுவத்தினருக்கும் மதத் தலைவர்களுக்கும் உரிய கௌரவத்தை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும். அப்பாவி மக்களின் தோள்களில் ஏறி ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கத் தவறினால் மிக விரைவில் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள். இந்த நிலைமையைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் எடுக்காவிட்டால், நாடு முன் எப்போதும் இல்லாத ஒரு அபாயகரமான நிலையை அடையும் என்றார்.