ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் கைது

Homeசெய்திகள்

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் கைது

ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அ

ஈரானின் வர்த்தக கூட்டாளிகள் மீது வரிகளை விதிக்க அங்கீகாரம் அளித்தார் டிரம்ப்
பொலிஸ் நிலைய விடுதியில் உறங்கிக்கொண்டிருந்த சக பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திய பொலிஸ் அதிகாரி கைது !
ஓமானில் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவும் ஈரானும் நடத்தின!!
தற்போதைய அரசாங்கத்தை இந்நாட்டு மக்கள் மிக விரைவில் வெறுத்து ஒதுக்குவார்கள் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியால் நிஷாந்த
சாணக்கியனின் தனி ஆவர்த்தனம்?


ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் பி.உதயராசா கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடை பகுதியில் கடந்த மாதம் 29ஆம் திகதி 04 கிலோ 423 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா தொடர்புப்பட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல்மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  இந்த நிலையில், கொழும்பில் இடம்பெற்றதாக கூறப்படும் பல முக்கிய குற்றச் செயல்களுடன் பி.உதயராசா தொடர்புப்பட்டுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

COMMENTS