கலஹா – நவனெலிய, கிரிபோகஹைன்ன பகுதியில், மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (07) காலை 10.00 மணியளவில் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கறிவேப்பிலை மரத்தில் இருந்து கறிவேப்பிலை பறித்துக்கொண்டிருந்தபோது, மின்சாரக்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (07) காலை 10.00 மணியளவில் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கறிவேப்பிலை மரத்தில் இருந்து கறிவேப்பிலை பறித்துக்கொண்டிருந்தபோது, மின்சாரக்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

COMMENTS