அமெரிக்காவுடனான தற்போதைய பதற்றங்கள் குறித்து இந்தியாவிற்கான ஈரானின் தூதர் கருத்து தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனமான பிடிஐ-இன்படி, ஈரானிய தூதர் முக
செய்தி நிறுவனமான பிடிஐ-இன்படி, ஈரானிய தூதர் முகமது ஃபதாலி பத்திரிக்கையாளர்களிடம், ”ஈரான் போரை விரும்பவில்லை.ஆனால் நாங்கள் அனைத்துக்கு தயாராக இருக்கிறோம். நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம்” என கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நேரத்தில், இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்காக ஓமனில் உள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கக் குழு சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் தலைமையில் உள்ளது, ஈரானியக் குழு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையில் உள்ளது.

COMMENTS