8
முல்லைத்தீவில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு, கள்ளியடி வயல்வெளி பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அருமைநாயகம் யசோதரன் (வயது 48) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.