Home டென்மார்க் டென்மார்க்கில் கார் கட்டுப்பாட்டை இழந்ததில் 12 பேர் காயம்!

டென்மார்க்கில் கார் கட்டுப்பாட்டை இழந்ததில் 12 பேர் காயம்!

by ilankai

டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள பாலக் கடவை அருகே கார் மோதியதில் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு முதியவர் தனது காரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அவரது கார் பல பாதசாரிகள் மீதும் ஒரு ஈருளிறு ஓட்டுநர் மீது மோதியது.

இச்சம்பவம் ஒரு பங்கரவாத தாக்குதலாக இருப்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் காவல்துறையினர் நிராகரித்தனர்.

இது ஒரு போக்குவரத்து விபத்து. அத்துடன் காயங்களுக்கு உள்ளானது வன்முறையானது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதியவர் ஓடிய கார் மின்சாரக்கார் ஆகும். அதனால் மின்சாரக் காரில் ஏதாவது கோளாறு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டதா என காவல்துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் குறைந்தது ஏழு ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர மருத்துவ வாகனங்கள் அனுப்பப்பட்டன.

கார் திடீரென திசை மாறி ஒரு இளைஞன் மீது மோதியதாகவும், அவர் காற்றில் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறினார். பின்னர் அது சோர்டெடம் டோசெரிங்கில் உள்ள லக்ககேஹுசெட் கஃபேக்கு வெளியே உள்ள மேசைகள் மீது மோதியது. மக்கள் அலறல் சத்தம் கேட்டது, பலர் ஓடத் தொடங்கினர்என நோில் பார்த்த சாட்சியாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related Articles