Home யாழ்ப்பாணம் அச்சமூட்டாதீர்கள்:டக்ளஸ்!

அச்சமூட்டாதீர்கள்:டக்ளஸ்!

by ilankai

யாழ்.மாநகரசபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஏறத்தாழ 20 நீதிப்பேராணை மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது.

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சிகளும்,சுயேச்சைக் குழுக்களும் இந்த நீதிப்பேராணை மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

இதனிடையே அரசியல் நலன்களுக்காக தேர்தல் மேடைகளிலும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் அரசியல் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பாக பேசப்படுகின்றது.

யாருக்கு எதிராகவேனும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் அவை தொடர்பாக நீதிமன்றங்களும் நீதிக் கட்டமைப்புக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர அரசியல்வாதிகள் அல்ல எனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

தேர்தல் ஆணைக்குழு தலமையகத்தில்  இன்று நடைபெற்ற கட்சி தலைவர்களுக்கு இடையிலான  சந்திப்பில் கலந்து கொண்ட டக்ளஸ் தேவானந்தா உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நாடெங்கிலும் ஓரே நாளில் நடாத்தப்படாமல், சிலவற்றுக்கான தேர்தல் திகதி ஒத்திவைக்கப்படுமாயின், முதலில் நடைபெறுகின்ற பிரதேசங்களின் தேர்தல் முடிவுகள், பின்னர் நடாத்தப்படும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தினை செலுத்தும் எனத் தெரிவித்துமுள்ளார்.

Related Articles