அக்கரைவெளியில் அறுவடை செய்த நெல்லை எடுத்துச் செல்ல முடியாமல் அவதியுறும் விவசாயிகள் ; ரவிகரன் களவிஜயம்

1001035466 300X169 1

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையப் பிரிவிற்குட்பட்ட, தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்லும் வீதி வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளமையினாலும், குறித்த வீதியில் அமைந்துள்ள விளாத்தியடி இறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அக்கரைவெளி விவசாய நிலங்களுக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தற்போது அக்கரைவெளியில் அறுவடைசெய்யப்பட்ட 5000 வரையிலான நெல் மூடைகள் அங்கிருந்து எடுத்துச்செல்ல முடியாமல் வயல்வெளிகளிலும் வீதிகளிலும் நீண்ட நாட்களாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டிற்கு அமைவாக அப்பகுதிக்குச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விவசாயிகள் எதிர்நோக்கும் பாதிப்பு நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பு நிலைமைகளைச் சீர் செய்வதற்கு தம்மால் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையப் பிரிவில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக அக்கரைவெளி பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதியினைச் சேர்ந்த விவசாயிகளும் திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமமான தென்னமரவடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும் சுமார் 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் நெற்செய்கை மேற்கொண்டு வருகின்றனர்.

1001035474 225X300 1இந்நிலையில் அக்கரைவெளி விவசாய நிலப் பகுதிக்குச் செல்லும் வீதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாலும், குறித்த வீதியில் அமைந்துள்ள விளாத்தியடி இறக்கப் பாலம் உடைப்பெடுத்துள்ளதாலும் அப்பகுதியில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்படும் பெரும்போக நெல்லினை அங்கிருந்து எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் குறிப்பாக 800 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல்நிலங்களில் அறுவடை மேற்கொள்ளப்பட்ட 5000 வரையிலான நெல் மூடைகள் அங்கிருந்து எடுத்துச்செல்ல முடியாத நிலையில் வீதியோரங்களிலும் வயல்வெளிகளிலும் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு இவ்வாறு எடுத்துச்செல்ல முடியாத நிலையில் 15 நாட்கள் வரையில் அங்கு நெல் மூடைகள் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் நெல் மூடைகள் மூழ்கிப் பாதிப்படைந்துள்ளன.

இதனால் அக்கரைவெளியில் தற்போது 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதனை விட இன்னும் அறுவடை செய்யவேண்டிய நிலையில் பல நூற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் அக்கரைவெளியில் காணப்படுகின்றபோதும் குறித்த வீதிப் பாதிப்பால் விவசாயிகள் அறுவடை செய்வதிலும் தயக்கங்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் முறையீட்டுக்கு அமைய துரைராசா ரவிகரன் கொக்கிளாய் புளியமுனைப் பகுதியிலிருந்து, கொக்கிளாய் களப்பினூடாக படகில் குறித்த அக்கரைவெளிப் பகுதிக்கு நேரடியாகச் சென்று விவசாயிகள் எதிர்நோக்கும் இடர்ப்பாடுகள் தொடர்பில் பார்வையிட்டார்.

இதன்போது விவசாயிகளால் உடைப்பெடுத்துள்ள விளாத்தியடி இறக்கப் பாலம் காண்பிக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாத நிலையில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்மூடைகளையும் ரவிகரனிடம் விவசாயிகள் காண்பித்தனர்.

1001035472 300X169 1அதேவேளை குறித்த விளாத்தியடி இறக்கப்பாலத்தினைத் தற்காலிகமாகச் சீர்செய்து தாம் தற்போது அறுவடை செய்யும் நெல்லை எடுத்துச்செல்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு நீண்ட நாட்கள் அடுக்கிவைக்கப்பட்டுள்ளதாலும், அடுக்கிவைக்கப்பட்ட நெல்மூடைகளுக்குள் வெள்ள நீர் உட்புகுந்ததாலும் சந்தைப்படுத்த முடியாத நிலையில் காணப்படும் தமது நெல்லுக்கு இழப்பீடுகளைப் பெற்றுத்தருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது விவசாயிகளால் ரவிகரனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் கொக்குத்தொடுவாய் கமநல சேவை நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு உடனடியாக தொலைபேசி அழைப்பெடுத்த ரவிகரன், விவசாயிகளின் பாதிப்பு நிலை தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் நிலைமைகளைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

இதுதவிர விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல் நிலைகள் தொடர்பில் உரிய தரப்பினர்களது கவனத்திற்கு கொண்டுவருவதுடன், விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பாதிப்பு நிலையை தீர்க்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ரவிகரனின் வலியுறுத்தலுக்கமைய கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணியிலிருந்து அக்கரைவெளி வரைக்குமான பாதையைச் சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், விரைவில் அந்த வீதியைச் சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

Jeffrey Epstein தொடர்பான ஆவணத்தில் இலங்கையின் பெயரும்!

அமெரிக்க நீதித்துறை இணையத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணக் காப்பகத்தில், ‘இலங்கை’ என்ற பெயர் 188 தேடல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், பயணத் தொடர்புகள், தொடர்பாடல் குறிப்புகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடனான உரையாடல்களில் இலங்கையின் பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இவை பெரும்பாலும் தற்செயலான நிகழ்வுகளாகவே அமைந்துள்ளன.
தனிநபர்கள் இலங்கைக்குச் சென்றமை அல்லது அங்கிருந்து திரும்பியமை குறித்த தகவல்கள், வசிப்பிட விபரங்கள், கல்விசார் குறிப்புகள், நேர வலயங்கள் மற்றும் பொதுவான உரையாடல்கள், இலங்கையில் தங்கியிருந்தமை அல்லது அங்கு செல்வதற்கான திட்டங்கள் போன்ற சாதாரண உரையாடல்கள் என்பன அவற்றில் உள்ளடங்கும்.
இந்தத் தேடல் முடிவுகளின் அடிப்படையில், எப்ஸ்டீனின் குற்றச்செயல்களுடன் இலங்கை ஒரு முக்கிய இடமாக இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான தகவல்கள் தற்செயலாகக் குறிப்பிடப்பட்டவையே தவிர, குற்றச்சாட்டுக..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

சிங்களவர்கள் சமஸ்டியை எதிர்ப்பதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் : கம்மன்பில

சிங்களவர்கள் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து போதிய ஆய்வுகளோ, தெளிவுபடுத்தல்களோ இல்லாத நிலையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில் முன்னோக்கி நகர முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்கும் நோக்கில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்துப் பேசப்படுவது ஆரோக்கியமானதொரு விடயம் என்றாலும், கடந்த காலங்களிலும் இதுபற்றி பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன” என்று அவர் தெரிவித்தார்.
அவ்வாறிருக்கையில் முன்னைய முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்று நிச்சயமாக ஆராயவேண்டும்.
அத்தோல்விக்கான காரணத்தைக் கண்டறியாமல் இவ்விடயத்தில் முன்னோக்கி நகரமுடியாது.
பெரும்பான்மையானோர் ஒருமித்த நாட்டையும், சிறுபான்மையானோர் சமஷ்டி முறைமையையும் வலியுறுத்தும் போக்கும், அது சார்ந்த பிரிவினையும் நாட்டில் பல தசாப்த காலமாக நிலவுகின்றது.
அந்தப் பிரிவினைகள் முன்னைய அரசியலமைப்பு முன்மொழிவுகளிலும்..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

ஐக்கிய தேசிய கட்சியை புதிய தலைமுறையிடம் கையளிக்க தயார்: ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியை புதிய தலைமுறையினரிடம் கையளிக்கத் தயாராகி வருவதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ‘Smart UNP’ டிஜிட்டல் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னர் பிறந்த ‘Zen Beta’ தலைமுறை இளைஞர்களிடம் கட்சியினதும், தேசத்தினதும் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு “எனக்கு இப்போது 70 வயதுக்கு மேல் ஆகிறது. இங்குள்ளவர்களில் பலருக்கு 70, 60 மற்றும் 50 வயதுக்கு மேல் ஆகிறது. இனிவரும் காலம் இளைஞர்களுக்கானது,” என அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க ‘Baby Boomers’ தலைமுறைக்காக நாட்டைத் தயார் செய்தார், ஜே.ஆர்.ஜயவர்தன மில்லினியல் (Millennials) தலைமுறையை உருவாக்கினார். அதேபோல், தான் இந்தப் புதிய தலைமுறையிடம் அதிகாரத்தை வழங்கத் தயாராக இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்பின் ப..

Read more

டித்வா புயல்: கண்டியில் நிவாரண திட்டங்கள்

 ‘டித்வா’ புயலினால் கண்டி மாவட்டத்தில் முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல், நட்டஈடு வழங்குதல் மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்தல் என்பன ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்…

Read more
25953243 Newproject 2026 02 05T171229326

மோடிமீது தாக்குதல் நடத்த திட்டமா? – பெண் எம்.பி.க்கள் கூறுவது என்ன?

லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை “நேரடியாகத் தாக்க ” திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாகச் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்தார்.
பிரதமரின் பாதுகாப்பு கருதியே அவரது பதிலுரை ரத்து செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்களை கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாக ஓம் பிர்லா தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு எம்பி ஜோதிமணி மற்றும் எம்பி சுதா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள எம்பி ஜோதிமணி, “கேள்விகளுக்கு பயந்துகொண்டு மோடி அவைக்கு வரவில்லை.
ராணுவ தளபதி கூறியது பொய் என பிரதமர் கூறுவாரா? மோடி, அதானி, பாஜகவை காப்பாற்ற இந்தியாவை மொத்தமாக அமெரிக்காவிற்கு அடகு வைத்துள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தெரியாமல் எப்படி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகும்? அதுபோல எப்ஸ்டீன் கோப்புகள் குறித்தும் விளக்கவேண்டும். இதைத்தான் கேட்கிறோம். இவைகளை கேட்க ராகுல் காந்தி முயலும்போது அவரை பேசவிடாமல் தடுக்கின்றனர். அவர்களின் பயமும், பலவீனமும் இன்று பிரதமரை அவைக்கு வரவிடாமல் தடுத்துள்ளது. அனைத்தையும் மறைக்க..

Read more

VIDEO > ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய  அரசுக்கு உதவி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் ; ஹிஸ்புல்லாஹ் MP

🔸இன்றைய (05.02.2026)  பாராளுமன்ற அமர்வின் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் நிகழ்த்தப்பட்ட உரை.   • கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட வீதிகளை சீர் செய்வதில் அமைச்சர்…

Read more