தற்போதைய அரசாங்கம் பதவியேற்றது முதல் ஒரு அலகிற்கான மின் உற்பத்திச் செலவு 37 ரூபாயிலிருந்து 29 ரூபாய் வரை குறைந்துள்ளதாகவும் — இது 22% வீழ்ச்சி எனவும் — உற்பத்திச் செலவைக் குறைப்பதன் மூலம் இந்தக் கட்டணக் குறைப்பை எட்ட முடியும் எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
“ஒரு அலகை உற்பத்தி செய்வதற்கான செலவைக் குறைக்காமல் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க முடியாது. தற்போது நாம் அதிக விலைக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்து நட்டத்தில் விற்பனை செய்கிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.
மின் உற்பத்திச் செலவை மேலும் 25 ரூபாய் வரை குறைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாகவும், இதன் மூலம் நுகர்வோர் மின்சாரக் கட்டணத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட 30% குறைப்பை வழங்க முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
