
மதுரி Thursday, February 05, 2026 கிளிநொச்சி, முதன்மைச் செய்திகள் கிளிநொச்சியில் பாடசாலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை (05) காலை 8.30 மணியளவில் குளவி கூடு கலைந்து மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளாகியத்தில், 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் எவருக்கும் எவ்வித ஆபத்தான நிலைமையிலும் ஏற்படவில்லை.சுமார் 2,000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் குறித்த பாடசாலையில் காணப்பட்ட பெரிய குளவி கூடு ஒன்று கலைந்துள்ளது. வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகி கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. Related Posts முதன்மைச் செய்திகள் NextYou are viewing Most Recent Post Post a Comment