மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ்சுக்கு காத்திருந்த பெண்ணுக்கு ஜூஸ் போத்தலில் மயக்க மருந்து கலந்து குடிக்க கொடுத்து 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை கொள்ளையடித்து சென்ற யுவதி


கனகராசா சரவணன்

மட்டக்களப்பு புதூர் பிரதேசத்துக்கு உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த 64 வயதுடைய முதியவரான பெண் ஒருவருக்கு யுவதி ஒருவர் ஜூஸ் போத்தலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் மயங்கியதும் அவர் அணிந்திருந்த 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான 5 பவுன் தங்க சங்கிலி 2 அரைப் பவுன் இரண்டு காப்புக்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் புதன்கிழமை (4) பிற்பகல் இடம் பெற்றுள்ளதுடன் மயக்கமடைந்த நிலையில் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முதியவரான பெண் தனது வீடான பெரிய கல்லாற்றில் இருந்து மட்டக்களப்பு புதூர் பிரதேசத்திலுள்ள அவரது சகோதரியின் மகளின் வீட்டிற்கு செல்வதற்காக சம்பவ தினமான புதன்கிழமை (4) பகல் 11.00 மணிக்கு அங்கிருந்து பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டியில்; ஏறி மட்டக்களப்பு நகரில் உள்ள பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு பிற்பகல் 2.00 மணியளவில் வந்தடைந்தடைந்தார்.

இதையடுத்து புதூருக்கு செல்வதற்கான பஸ் வண்டி 10 நிமிடத்துக்கு முன்னர் சென்றதையடுத்து அடுத்த பஸ் வண்டிக்காக பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்து கொண்டார். இதன்போது அங்கு மோட்டார் சைக்கிள் ஒன்றில் இளைஞர் ஒருவருடன் வந்த இளம் யுவதி ஒருவர் பஸ் வண்டிக்காக காத்திருந்த அந்த முதியவரான பெண்ணுக்கு அருகில் சென்ற பேச்சுக் கொடுத்துக் கொண்டு தங்க ஆபரணங்களை கழற்றி கைபையில் வைக்கவும் இங்கு கள்ளர்கள் அதிகம் உங்கள் சங்கிலியை அறுத்து சென்று விடுவார்கள் என அவர் கொண்டு வந்த ஜூஸ் போத்தலை கொடுத்து அதை குடிக்குமாறு பலதடவை கேட்டுக் கொண்டதை அடுத்து அதனை குடித்துள்ளார்.

இந்த ஜூஸை குடித்த அவர் மயக்கமானதையடுத்து அவரின் கை பையில் இருந்த 7 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களை அந்த யுவதி கொள்ளையடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞருடன் தப்பி ஓடியுள்ளார்.

இந்த நிலையில் அங்கு மாலை 5.30 மணியளவில் பஸ் வண்டிக்காகச் சென்ற ஒரு பெண் குறித்த முதிய பெண் அங்கு கிடந்துள்ள நிலையில் அயலவர்களின் உதவியுடன் உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Posts

Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

ட்ரம்பிற்குச் சவால் விடும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகிலும் வாழ்கிறோம்

ஐக்கிய தேசியக் கட்சி ‘ஸ்மார்ட்’ அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்திற்காகத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ‘SMART UNP’டிஜிட்டல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் பிறந்த தலைமுறையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது வந்துவிட்டது.
அரசியல் கட்சிகளையும் அரசியலையும் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னின்று செயல்பட வேண்டும்.
மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ‘மில்லினியர் தலைமுறையைத் தயார்படுத்தினார். நாம் இப்போது ’ஜென் ஷீ’ தலைமுறையிடம் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக வேண்டும்.
நாம் ஸ்மார்ட் அரசியலை நோக்கி நகர வேண்டும் மற்றும் தொழில்நுட்பங்களைத் தழுவ வேண்டும்.
ஜே.ஆர். ஜயவர்தனவின் யுகத்தில் நாம் இல்லை. நாம் ட்ரம்பின் உலகில் வாழ்கிறோம்.
அதே சமயம் ட்ரம்பிற்குச் சவால் விடும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகிலும் வாழ்கிறோம்.
எமத..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

இலங்கையில் சிறுவர்கள் யாசகம் எடுப்பது அதிகரிப்பு

சிறுவர்களை யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தரவு அறிக்கைகள் இதனை தெரிவித்துள்ளன.
இதன்படி, சிறுவர்கள் யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சபைக்கு கடந்த ஆண்டு முதல் 287 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், சிறுவர்கள் யாசகம் எடுப்பது தொடர்பாக அதிகாரசபைக்கு 237 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
இந்த விடயம் குறித்து பேசிய மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, கடந்த காலங்களில் சிறுவர்கள் தொடர்பான சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததாகக் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விடயத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய கணக்காய்வாளர் நாயகம்

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று (5) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். இலங்கையின் 42-வது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள அவர், இந்த பதவிக்கு தெரிவான முதல் பெண் என்ற பெருமையையும்…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த இந்திய பிரதமர்

கொழும்பிலுள்ள புனித கங்காராமை விகாரையில் புனித தேவ்னிமோரி சின்னங்களின் தரிசனத்தை ஆரம்பித்துவைத்தமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தள பதிவொன்றில் இந்திய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
2025 ஏப்ரலில் எனது விஜயத்தின்போது இச்சின்னங்களை இலங்கைக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்பட்டதுடன் அதன் அடிப்படையில் மக்கள் வழிபாட்டினை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
நமது நாடுகள் ஆழமான நாகரீக மற்றும் ஆன்மீக பிணைப்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன.
புத்த பெருமானின் கருணை, அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த காலத்தால் அழியாத செய்தியானது தொடர்ந்து மனித குலத்துக்கு வழிகாட்டட்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள புனித கங்காராமை விகாரையில் புனித தேவ்னிமோரி சின்னங்களின் தரிசனத்தை ஆரம்பித்துவைத்தமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு நன்றி.
2025 ஏப்ரலில் எனது விஜயத்தின்போது இச்சின்னங்களை இலங்கைக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்பட்டதுடன் அதன் அடிப்படையில்&h..

Read more
Image Ca287Cde46

தெஹிவளையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

தெஹிவளை பகுதியில் நேற்று (04) பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தெஹிவளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை, இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Read more
Image 7D493D94C6

வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் மூவர் கைது

சுமார் 1 கோடி 28 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற மூவர், வியாழக்கிழமை (05) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
நீர்கொழும்பு,கொட்டாரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61,42 மற்றும் 18 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் சஜா நகரிலிருந்து ஏர் அரேபியா விமானம் G.9587 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
மூவரும் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளிலிருந்து பிளாட்டினம், மான்செஸ்டர் மற்றும் பென்சன் & ஹெட்ஜஸ் சிகரெட்டுகள் 85,800 அடங்கிய 429 சிகரெட் அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைக்காக புதன்கிழமை (11) அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Read more