சுவிட்சர்லாந்தில் மீண்டும் தலைதூக்கும் பழைய மோசடி ஒன்று

சுவிட்சர்லாந்தில், பழைய மோசடி ஒன்று மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், அதிகாரிகள் அது குறித்து மக்களை எச்சரித்துள்ளார்கள்.

மீண்டும் தலைதூக்கும் மோசடி

சுவிட்சர்லாந்தில், குறிப்பாக, வடமேற்கு சுவிட்சர்லாந்தில், மின்வாரியப் பணியாளர்கள் என தங்களை அறிமுகம் செய்துகொண்டு மீற்றரை பரிசோதிக்கவேண்டும் என்று கூறி சிலர் வீடுகளுக்குள் நுழைகிறார்களாம்.மக்கள் அவர்களை மின்வாரியப் பணியாளர்கள் என நம்பி வீட்டுக்குள் அனுமதிக்க, அந்த நபர்கள் விலையுயர்ந்த பொருட்களை திருடிச் சென்றுவிடுகிறார்களாம்.

இந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து, மின்வாரிய அதிகாரிகள், தங்கள் பணியாளர்கள் எப்போதுமே தெளிவான அடையாள அட்டை அணிந்திருப்பார்கள் என்றும், பணம் கேட்க மாட்டார்கள் என்றும், மக்களுக்கு தொல்லை கொடுக்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

அத்துடன், பொலிசாரும், முன் நடைபெற்ற இதுபோன்ற மோசடிகள் மீண்டும் தலைதூக்குவது தெரியவந்துள்ளதாகவும், அப்படி யாராவது மின்வாரியப் பணியாளர்கள் என்று கூறி கதவைத் தட்டினால், சந்தேகம் ஏற்பட்டால் கதவைத் திறக்கவேண்டாம் என்றும், பொலிசாரை அழைக்குமாறும் மக்களைக்கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Related Posts

மனநலச் சுகாதார சட்டம் விரைவில் – பிரதி அமைச்சர்

 மனநலச் சுகாதார சட்டத்தை விரைவாகக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். தேசிய மனநல சுகாதார நிறுவனத்தின் 100-வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்…

Read more
பிரான்சில்-இடம்பெற்ற-சிறிலங்கா-சுதந்திர-நாள்-தமிழினத்தின்-கரிநாள்-போராட்டம்

பிரான்சில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள் போராட்டம்

சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 04.02.2026 புதன்கிழமை பிற்பகல் 1700 மணிக்கு பாரிசு நகரின் மத்தியில் பிரான்சு நாடாளுமன்றம் அமைந்துள்ளபகுதியில் இடம்பெற்றது.தமிழர் ஒருங்கிணைப்புக் குழு -பிரான்சு அரசியல் பிரிவு ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அகவணக்கம்…

Read more
ஈழத்தமிழர்களுக்கு-கரிநாள்-–-இலங்கையின்-சுதந்திர-தினத்தில்-லண்டனில்-மாபெரும்-கண்டன-ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களுக்கு கரிநாள் – இலங்கையின் சுதந்திர தினத்தில் லண்டனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களுக்கு இலங்கையின் சுதந்திர தினம் ஒரு கரி நாள் என்று கூறியும் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்டுவரும்  படுகொலைகள் மற்றும் கடத்தப்பட்டு  காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும் இன்று லண்டனில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று …

Read more
தவறான-நோயறிதல்:-நுழையீரல்-அகற்றப்பட்டது!

தவறான நோயறிதல்: நுழையீரல் அகற்றப்பட்டது!

தவறான நோயறிதலுக்குப் பின்னர் பெண்ணின் ஆரோக்கியமான நுரையீரல் அகற்றப்பட்டது.ஆஸ்திரிய நாட்டின் ஸ்டைரியாவைச் சேர்ந்த 48 வயது பெண்மணியின் நுரையீரல் பகுதி தவறான புற்றுநோய் இருப்பதான நோயறிதலைத் தொடர்ந்து அகற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தான் அவருக்கு புற்றுநோய் இல்லை என்பது தெரியவந்தது.மற்றொரு தவறான…

Read more

விமானம் தாங்கி கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன்; சுட்டு வீழ்த்தியது அமெரிக்க ராணுவம்

 அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால், பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ”அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தால், பெரிய அளவில் போர் வெடிக்கும்’ என ஈரான் உச்ச தலைவர் கமேனி எச்சரித்துள்ளார். இந்த சூழலில்,…

Read more

லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சுட்டுக்கொலை – வீட்டுக்குள் புகுந்து தாக்குதல்

 முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் லிபியாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சைஃப் அல்-இஸ்லாம் கடாபிவட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் சுமார் 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தவர் கடாபி. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டு கிளர்ச்சியின் போது கடாபி…

Read more