‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் இருந்து சசி தரூர் மகன் உட்பட 300 ஊழியர்கள் நீக்கம்

அமெரிக்​கா​வில் ‘நியூ​யார்க் டைம்​ஸ்’, ‘தி வால் ஸ்ட்ரீட் ஜேர்​னல்’, ஆகிய​வற்​றுக்கு அடுத்​த​படி​யாக அதி​கம் விற்பனை​யாகும் 3-வது பெரிய தினசரி நாளிதழ் ‘வாஷிங்​டன் போஸ்ட்’.

கடந்த 1877-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​ட இதன் உரிமை பலரிடம் கை மாறி​யுள்​ளது. இறு​தி​யாக கடந்த 2013ம் ஆண்​டில் இந்த பத்திரி​கையை அமே​சான் நிறு​வனர் ஜெப் பெசோஸ் 250 மில்லியன் டாலருக்கு வாங்​கி​னார். இந்த நாளிதழின் விற்​பனை கடந்​தாண்​டில் 1 லட்​சம் பிர​தி​களுக்கு கீழ் குறைந்​தது. கடந்த 55 ஆண்​டு​களில் முதல் முறை​யாக இதன் விற்​பனை 1 லட்​சம் பிரதிகளுக்கு கீழ் குறைந்​தது.

இந்​நிறு​வனத்​தில் 800-க்​கும் மேற்​பட்ட பத்​திரி​கை​யாளர்​கள் பணியாற்​றினர். நிதி நெருக்​கடி காரண​மாக இவர்​களில் 300-க்கும் மேற்​பட்​டோரை வாஷிங்​டன் போஸ்ட் பணி நீக்​கம் செய்துள்ளது. விளை​யாட்டு செய்தி பிரிவு, வெளி​நாட்டு நிருபர்​கள் பணி​யில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் காங்​கிரஸ் எம்​.பி சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒரு​வர். இவர் சர்​வ​தேச விவ​காரங்​கள் குறித்த செய்​தி​களை எழு​தி வந்​தார்.

பணி​யில் இருந்து நீக்​கப்​பட்​டது குறித்து எக்ஸ் தளத்​தில் இஷான் தரூர் கூறுகை​யில், ”வாஷிங்​டன் போஸ்ட் பத்​திரிக்​கையி​ல் இருந்து நான் நீக்​கப்​பட்​டுள்​ளேன். என்​னுடன் பணி​யாற்​றிய சர்வதேச நிருபர்​கள் பலரும் நீக்​கப்​பட்​டுள்​ளனர். நிறு​வனத்​தின் நடவடிக்​கை​யால் மனம் உடைந்துவிட்டேன்.

சுமார் 12 ஆண்​டு​கள் மிகச் சிறந்த நபர்​களு​டன் பணி​யாற்​றியதை கவுர​வ​மாகக் கருதுகிறேன். வேல்ட் வியூ என்ற பகு​தியை வாஷிங்டன் போஸ்ட் பத்​திரிக்​கை​யில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கி சர்​வ​தேச விவ​காரங்​கள் குறித்த செய்​தியை எழு​தி வந்தேன். இதை பல ஆண்​டு​களாக விரும்பி படித்த வாசகர்களுக்கு நன்​றி” என குறிப்​பிட்​டுள்​ளார்​.

Related Posts

கேஸ் விலை அதிகரிப்பு ..

பிப்ரவரி 06 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பிப்ரவரி 2026-க்கான லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் புதிய விலைகள்: 12.5 கிலோ – ரூ. 4,330 மற்றும் 5 கிலோ – ரூ. 1,742. முக்கிய விபரங்கள்: • 12.5…

Read more

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணை யாழ்ப்பாணம்…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

NPP அரசுக்குள் எந்தப் பிளவும் இல்லை: எமக்குப் பதவியைவிட கடமையே முக்கியம்!

“தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. என்பவற்றுக்கிடையில் எவ்வித பிளவும் இல்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் கூட எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. எமது அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்ளாத தரப்பினரே வதந்திகளைப் பரப்புகின்றனர்.” என ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
தனது இந்திய விஜயத்துக்கு முன்னதாக அரசாங்க ஊடகத்தக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றுக்கிடையில் முரண்பாடு உள்ளது என வெளியாகும் தகவல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியவை வருமாறு,
“நாம் சகோதரத்துவத்துடனேயே செயல்பட்டுவருகின்றோம். ஒருமித்த இலக்கை நோக்கியே எமது பயணம் உள்ளது. பதவி என்பதைவிட பொறுப்பு என்பதே எமக்கு முக்கியம்.
ஜே.வி.பி. மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றின் இலக்கு ஒருமித்தாகவே உள்ளது.
பிரதமர் ஹரிணிக்கும் எனக்கும் இடையில்கூட மோதல் உள்ளது என கருத்து பரப்பினர். அவ்வாறு எதுவும் இல்லை. நாம் விவாதத்தில் ஈடுபட்டாலும் அது ஒருபோதும் மோதலாக மாறிதில்லை.
ஏனைய கட்சிகளைப்போல தனிநபர் செல்வாக்கு செலுத்தும் க..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய இரத்தை உயர்நீதிமன்றம் அங்கீகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது.
இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக அமையாததால், இதனை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறான ஓய்வூதியச் சலுகைகளை வழங்குவது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கமாக இருக்கவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய ஓய்வூதியச் சட்டமானது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு ஒரு விதிவிலக்காகக் காணப்படுவதாகவும், புதிய சட்டமூலம் அந்த விதிவிலக்கை நீக்கி சமத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.
இந்தச் சட்டமூலமானது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களால் வழங்கப்பட்ட தெளிவான ஆணையின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படு..

Read more
26 6985C85C8963A 300X200 1

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சற்றுமுன் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் இன்று(06.02.2026) மக்கள் அதிகம் கூடியிருந்த சமயத்திலேயே இவ்வாறு நிகழ்ந்துள்ளது.
அதில், குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது
மேலும் 80 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பின் தாக்கத்தால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன், அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாகவும் கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குண்டுவெடிப்பு தொடர்பில் இதுவரை எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாதிகள் பயங்கரவாத தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், தற்போது..

Read more
Download 7 2

பார்மசி பெயரில் போதை பொருட்கள் விற்கும் சர்வதேச கும்பலின் 200+ இணையதளங்கள் அமெரிக்காவில் முடக்கம்

இந்​தி​யாவை தளமாகக் கொண்டு ஆன்லைனில் பார்மசி என்ற பெயரில் போதை பொருட்கள் விற்​கும் சர்​வ​தேச கிரிமினல் அமைப்​புடன் தொடர்​புடைய 200-க்​கும் மேற்​பட்ட வலைகளங்​களை அமெரிக்கா முடக்கி உள்​ளது.
இதுகுறித்து அமெரிக்க மருந்து கட்​டுப்​பாட்​டுத் துறை அதிகாரி​கள் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியதாவது: இந்​தி​யாவை தளமாகக் கொண்டு நூற்றுக்கும் மேற்​பட்ட இணை​யதளங்​களில் மருந்து மற்றும் போதைப் பொருட்​கள் விற்​ப​தாக பல்​வேறு புகார்கள் வந்​தன. இதையடுத்து மருந்​துக் கட்டுப்பாட்டு துறை கள ஆய்​வாளர்​கள், நாடு முழு​வதும் பல்​வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வரு​கின்​றனர்.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் இந்த ஆய்வு நடை​பெறுகிறது. ஆன்​லைனில் பார்​மசி என்ற பெயரில் சட்​ட​விரோத​மாக மருந்து மற்​றும் போதைப் பொருட்​கள் விற்​பனை செய்​த​தில் இது​வரை 3 பேர் உயி​ரிழந்​தது தெரிய வந்​துள்​ளது. அத்துடன் 6 பேர் அதிக டோஸ் மருந்​துகள் எடுத்​துக் கொண்​ட​தில் உடல்நிலை மிக​வும் பாதிக்​கப்​பட்​டுள்ளது.
இதுதொடர்​பாக 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மேலும், இந்​தி​யாவை தளமாகக் கொண்டு இது​போல் ஆன்லைனில் போதை பொருட்கள் விற்​க..

Read more