வேலணை – புங்குடுதீவு வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை கும்பலை சேர்ந்தவரின் அச்சுறுத்தல் அதிகரித்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பலதரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரு வாள்கள் மற்றும் ஒரு அபாயகரமான கோடாரி உட்பட சில பொருட்களும் கைதானவர்களிடம் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கும் ஊர்காவற்றுறை பொலிஸார் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
