யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், மேலும் குறித்த நிகழ்விற்கு தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு இலங்கை கடற்படை தொழில்நுட்பம், வளம் மற்றும் மனிதவள ஆதரவை வழங்கி வருகிறது.
அதன்படி, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையில், புனித அந்தோனியார் தேவாலயத்தின் தேவாலயத்தில் நடைபெரும் வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தற்காலிக கப்பல் நிலையங் அமைத்தல், குடிநீருக்கான நீர் அமைப்புகளை அமைத்தல், சுகாதார வசதிகள், தற்காலிக அறைகள் மற்றும் தற்காலிக பாதைகள் நிறுவுவதுடன் மின்சார வசதிகளை நிறுவுதல் ஆகியவை இந்த நாட்களில் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்தர்களைப் பாதுகாக்க உயிர்காப்பாளர்களை நிறுத்தக்கூடிய இடங்களையும், மருத்துவ வசதிகளை வழங்க தற்காலிக மருத்துவமனையை நிர்மாணிப்பதையும் கடற்படை கண்டறிந்து வருவதுடன், கடற்படையின் உதவியுடன் அம..
Read more