புலிகள் மீதான தடையை நீக்கக் கோரிய மனு: வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான மத்திய அரசின் தடைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு அவகாசம் கேட்டதால் வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் பெப்ரவரி 16-ந் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி 2013-ல் வைகோ தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (06) அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வைகோ நேரில் ஆஜராகி, இந்தத் தடை ஏன் சட்ட விரோதமானது என்பதற்கான முதற்கட்ட வாதங்களை முன்வைத்தார்.

வௌ்ளிக்கிழமை (06) அன்று இடம்பெற்ற விசாரணையின் போது மத்திய அரசு அவகாசம் கேட்டதால் வழக்கு ​பெப்ரவரி 16-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வௌ்ளிக்கிழமை (06) அன்று இடம்பெற்ற வழக்கு விசாரணை குறித்து வைகோ கூறுகையில், “விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டையும் இணைத்து தமிழீழம் அமைக்க முயல்கிறார்கள்” என்பதுதான் மத்திய அரசின் முக்கியமான குற்றச்சாட்டு. இதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். வட்டுக்கோட்டை தீர்மானத்திலோ, தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரைகளிலோ ஒருபோதும் தமிழ்நாட்டை இணைக்கும் நோக்கம் இருந்ததில்லை என்பதை ஆதாரங்களுடன் விளக்கினேன்.

பிரபாகரன் பின்னால் இருக்கும் தமிழீழ வரைபடத்தில் கூட தமிழ்நாட்டின் ஒரு சிறு துளி இடம் கூட இருந்ததில்லை. ஈழ மண்ணை மீட்பது மட்டுமே அவர்களின் நோக்கம். மத்திய அரசின் அடிப்படை வாதமே பொய்யானது எனும்போது, இந்தத் தடையின் மொத்த கட்டுமானமும் (The whole edifice of the ban) சரிந்து விழுகிறது.

ஆயுதப் போராட்டம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது, 1948 ஐநா மனித உரிமைகள் பிரகடனத்தின் முகவுரையை மேற்கோள் காட்டினேன். ஒரு நாட்டில் அடக்குமுறையும் சர்வாதிகாரமும் நிலவும் போது, அதை எதிர்த்துப் புரட்சி செய்வது (Rebellion against tyranny) நியாயமானது என ஐநா-வே அங்கீகரிக்கிறது.

மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா ரிவோனியா நீதிமன்றத்தில் சொன்னது போல—அரசாங்கம் ஆயுதங்களால் மக்களை ஒடுக்கும் போது, மக்கள் தற்காப்புக்காக ஆயுதம் ஏந்துவது தவிர்க்க முடியாதது. ஈழத்தில் நடந்தது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை (Genocide). அதற்கான நீதியை வென்றெடுக்கும் வரை எனது சட்டப்போராட்டம் ஓயாது என்றார்.

Related Posts

Download 6 4

செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் பாராட்டு

டெல்​லி​யில் வரும் 19, 20 ஆகிய தேதி​களில் செயற்கை நுண்​ணறிவு தொடர்​பான உச்சி மாநாட்டை இந்​தியா நடத்​தவுள்​ளது. இதில் பல்​வேறு நாடு​களின் தலைவர்​கள், பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொள்​ளவுள்ளனர். இந்த உச்சி மாநாட்​டுக்கு வரு​வதை ஐ.நா. சபை தலை​வர் அன்டோனியா குட்​டேரஸும் உறுதி செய்​துள்​ளார்.
இதுகுறித்து செய்தி நிறு​வனத்​துக்கு நேற்று அவர் அளித்த பேட்​டி: செயற்கை நுண்​ணறி​வுத்​துறை என்​பது மிக​வும் வேக​மாக வளர்ந்து வரும் ஒரு துறை​யாகப் பார்க்​கப்​படு​கிறது. இதனால் பல நன்​மை​களும், தீமை​களும் உண்​டு. சர்​வ​தேச உறவு​களில் இன்று செயற்கை நுண்​ணறிவு முக்கிய​மான விஷய​மாக​வும், பிரச்​சினை​யாக​வும், எதிர்கால சவால்​களில் ஒன்​றாக​வும் உள்​ளது.
இந்​தத் துறை​யால் பல நிபுணர்​கள் வேலை​யிழக்​கும் அபாயம் உள்​ள​தாக கருதுகின்​றனர். எனவே, இதுதொடர்​பாக அனைத்து வகை​யான சூழ்​நிலைகளி​லும் உலக நாடுகள் ஒன்​றிணைந்து அதைப் பற்றி விவா​திப்​பது மிகவும் முக்​கி​யம்.
இந்த உச்​சி​மா​நாட்​டில் தலை​மைப் பொறுப்பை ஏற்​றுக்​கொண்​டதற்​காக இந்​தி​யாவை நான் பாராட்​டு​கிறேன். இந்த உச்சி மாநாட்​டில் செயற்கை நுண்​ணறிவு தொடர்பாக எழுந்​த..

Read more
Download 5 5

“இந்தியா – பாக். போரை நிறுத்தியது நானே!” – 90வது முறையாக ட்ரம்ப் தம்பட்டம்

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். 90-வது முறையாக அவர் இப்படி சொல்வது குறிப்பிடத்தக்கது.
“கம்போடியா மற்றும் தாய்லாந்து, கொசோவோ மற்றும் செர்பியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் ஈரான், அர்மேனியா மற்றும் அசர்பைஜான் என கடந்த ஓராண்டில் நான் எட்டு போர்களை நிறுத்தி உள்ளேன்.
உலகில் சக்தி வாய்ந்த நாடு என்றால் அது அமெரிக்காதான். முதல் முறையாக நான் அதிபராக இருந்தபோது ராணுவத்தை கட்டமைத்தேன். இதில் அணு ஆயுதங்கள் உட்பட பல்வேறு நவீன ஆயுதங்களும் உள்ளடங்கும். இப்போது அதை மேலும் சக்தி வாய்ந்த ராணுவ படையாக கட்டமைத்துள்ளேன். இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட போர் கப்பலை காட்டிலும் நூறு மடங்கு சக்திவாய்ந்த போர் கப்பல்கள் நம் வசம் உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான், ரஷ்யா – உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஈரான் இடையிலான அணு ஆயுதப் போரை நான் நிறுத்தினேன்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு மே 10-ம் தேதி அன்று இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்தம் குறித்து சமூக வலைதள..

Read more
Download 3 4

‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் இருந்து சசி தரூர் மகன் உட்பட 300 ஊழியர்கள் நீக்கம்

அமெரிக்​கா​வில் ‘நியூ​யார்க் டைம்​ஸ்’, ‘தி வால் ஸ்ட்ரீட் ஜேர்​னல்’, ஆகிய​வற்​றுக்கு அடுத்​த​படி​யாக அதி​கம் விற்பனை​யாகும் 3-வது பெரிய தினசரி நாளிதழ் ‘வாஷிங்​டன் போஸ்ட்’.
கடந்த 1877-ம் ஆண்டு தொடங்​கப்​பட்​ட இதன் உரிமை பலரிடம் கை மாறி​யுள்​ளது. இறு​தி​யாக கடந்த 2013ம் ஆண்​டில் இந்த பத்திரி​கையை அமே​சான் நிறு​வனர் ஜெப் பெசோஸ் 250 மில்லியன் டாலருக்கு வாங்​கி​னார். இந்த நாளிதழின் விற்​பனை கடந்​தாண்​டில் 1 லட்​சம் பிர​தி​களுக்கு கீழ் குறைந்​தது. கடந்த 55 ஆண்​டு​களில் முதல் முறை​யாக இதன் விற்​பனை 1 லட்​சம் பிரதிகளுக்கு கீழ் குறைந்​தது.
இந்​நிறு​வனத்​தில் 800-க்​கும் மேற்​பட்ட பத்​திரி​கை​யாளர்​கள் பணியாற்​றினர். நிதி நெருக்​கடி காரண​மாக இவர்​களில் 300-க்கும் மேற்​பட்​டோரை வாஷிங்​டன் போஸ்ட் பணி நீக்​கம் செய்துள்ளது. விளை​யாட்டு செய்தி பிரிவு, வெளி​நாட்டு நிருபர்​கள் பணி​யில் இருந்து நீக்​கப்​பட்​டுள்​ளனர். இவர்​களில் காங்​கிரஸ் எம்​.பி சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒரு​வர். இவர் சர்​வ​தேச விவ​காரங்​கள் குறித்த செய்​தி​களை எழு​தி வந்​தார்.
பணி​யில் இருந்து ..

Read more
Download 6 3

‘‘சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ உடன் இணைக்க நடவடிக்கை’’ – அஸ்வினி வைஷ்ணவ்

சென்னையில் பறக்கும் ரயில் போக்குவரத்து சேவையை, மெட்ரோ ரயில் சேவையுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள அஸ்வினை வைஷ்ணவ், ‘‘சென்னையில் பறக்கும் ரயில் போக்குவரத்து சேவையை, மெட்ரோ ரயில் சேவையுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பறக்கும் ரயில் போக்குவரத்து சேவையின் சொத்துகள், பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளை தமிழக அரசிடம் ஒப்படைப்பதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் இடையே விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. தற்போது ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அத்திப்பட்டு – கும்மிடிபூண்டி இடையே 22.52 கிமீ நீளத்திற்கு 3-வது மற்றும் 4-வது வழித்தடம் அமைப்பற்கான ஒப்புதல் அண்மையில் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அண்மை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவ..

Read more
Download 5 4

வடகலை, தென்கலை பிரச்சினையில் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

வல்லம் ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயிலில் ஏற்பட்ட வடகலை, தென்கலை பிரச்சினையில் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்த பத்ரி நாராயணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. கோயில் முழுமையாக வடகலை ஸ்ரீ வைஷ்ணவ சமயம் மற்றும் பாஞ்சராத்ர ஆகமத்தை பின்பற்றும் கோயில். தற்போது வைகானச ஆகமப்படி குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே வல்லம் ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயில் குடமுழக்கை வைகானச ஆகமத்தை பின்பற்றி நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, தென்கலை நாமத்தை அகற்றி வடகலை நாமத்தை மீண்டும் நிறுவவும், உரிய பரிகாரத்தை செய்து பாஞ்சராத்ர ஆகமப்படி குடமுழுக்கை நடத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ண அமர்வு, “இந்து சமய அறநிலையத் துறையில் இந்த கோயில் தென்கலை முறையை பின்பற்றுகிறது என ஆவணங்கள் ஏதும் பராமரிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர..

Read more
Thumb Large D 300X200 1

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், மேலும் குறித்த நிகழ்விற்கு தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு இலங்கை கடற்படை தொழில்நுட்பம், வளம் மற்றும் மனிதவள ஆதரவை வழங்கி வருகிறது.
அதன்படி, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையில், புனித அந்தோனியார் தேவாலயத்தின் தேவாலயத்தில் நடைபெரும் வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தற்காலிக கப்பல் நிலையங் அமைத்தல், குடிநீருக்கான நீர் அமைப்புகளை அமைத்தல், சுகாதார வசதிகள், தற்காலிக அறைகள் மற்றும் தற்காலிக பாதைகள் நிறுவுவதுடன் மின்சார வசதிகளை நிறுவுதல் ஆகியவை இந்த நாட்களில் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்தர்களைப் பாதுகாக்க உயிர்காப்பாளர்களை நிறுத்தக்கூடிய இடங்களையும், மருத்துவ வசதிகளை வழங்க தற்காலிக மருத்துவமனையை நிர்மாணிப்பதையும் கடற்படை கண்டறிந்து வருவதுடன், கடற்படையின் உதவியுடன் அம..

Read more