Related Posts
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் பாராட்டு
டெல்லியில் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாட்டை இந்தியா நடத்தவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். இந்த உச்சி மாநாட்டுக்கு வருவதை ஐ.நா. சபை தலைவர் அன்டோனியா குட்டேரஸும் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு நேற்று அவர் அளித்த பேட்டி: செயற்கை நுண்ணறிவுத்துறை என்பது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகப் பார்க்கப்படுகிறது. இதனால் பல நன்மைகளும், தீமைகளும் உண்டு. சர்வதேச உறவுகளில் இன்று செயற்கை நுண்ணறிவு முக்கியமான விஷயமாகவும், பிரச்சினையாகவும், எதிர்கால சவால்களில் ஒன்றாகவும் உள்ளது.
இந்தத் துறையால் பல நிபுணர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக கருதுகின்றனர். எனவே, இதுதொடர்பாக அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் உலக நாடுகள் ஒன்றிணைந்து அதைப் பற்றி விவாதிப்பது மிகவும் முக்கியம்.
இந்த உச்சிமாநாட்டில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதற்காக இந்தியாவை நான் பாராட்டுகிறேன். இந்த உச்சி மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக எழுந்த..
“இந்தியா – பாக். போரை நிறுத்தியது நானே!” – 90வது முறையாக ட்ரம்ப் தம்பட்டம்
கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். 90-வது முறையாக அவர் இப்படி சொல்வது குறிப்பிடத்தக்கது.
“கம்போடியா மற்றும் தாய்லாந்து, கொசோவோ மற்றும் செர்பியா, இந்தியா மற்றும் பாகிஸ்தான், இஸ்ரேல் மற்றும் ஈரான், அர்மேனியா மற்றும் அசர்பைஜான் என கடந்த ஓராண்டில் நான் எட்டு போர்களை நிறுத்தி உள்ளேன்.
உலகில் சக்தி வாய்ந்த நாடு என்றால் அது அமெரிக்காதான். முதல் முறையாக நான் அதிபராக இருந்தபோது ராணுவத்தை கட்டமைத்தேன். இதில் அணு ஆயுதங்கள் உட்பட பல்வேறு நவீன ஆயுதங்களும் உள்ளடங்கும். இப்போது அதை மேலும் சக்தி வாய்ந்த ராணுவ படையாக கட்டமைத்துள்ளேன். இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட போர் கப்பலை காட்டிலும் நூறு மடங்கு சக்திவாய்ந்த போர் கப்பல்கள் நம் வசம் உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான், ரஷ்யா – உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஈரான் இடையிலான அணு ஆயுதப் போரை நான் நிறுத்தினேன்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு மே 10-ம் தேதி அன்று இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்நிறுத்தம் குறித்து சமூக வலைதள..
‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் இருந்து சசி தரூர் மகன் உட்பட 300 ஊழியர்கள் நீக்கம்
அமெரிக்காவில் ‘நியூயார்க் டைம்ஸ்’, ‘தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்’, ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகம் விற்பனையாகும் 3-வது பெரிய தினசரி நாளிதழ் ‘வாஷிங்டன் போஸ்ட்’.
கடந்த 1877-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதன் உரிமை பலரிடம் கை மாறியுள்ளது. இறுதியாக கடந்த 2013ம் ஆண்டில் இந்த பத்திரிகையை அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 250 மில்லியன் டாலருக்கு வாங்கினார். இந்த நாளிதழின் விற்பனை கடந்தாண்டில் 1 லட்சம் பிரதிகளுக்கு கீழ் குறைந்தது. கடந்த 55 ஆண்டுகளில் முதல் முறையாக இதன் விற்பனை 1 லட்சம் பிரதிகளுக்கு கீழ் குறைந்தது.
இந்நிறுவனத்தில் 800-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பணியாற்றினர். நிதி நெருக்கடி காரணமாக இவர்களில் 300-க்கும் மேற்பட்டோரை வாஷிங்டன் போஸ்ட் பணி நீக்கம் செய்துள்ளது. விளையாட்டு செய்தி பிரிவு, வெளிநாட்டு நிருபர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒருவர். இவர் சர்வதேச விவகாரங்கள் குறித்த செய்திகளை எழுதி வந்தார்.
பணியில் இருந்து ..
‘‘சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ உடன் இணைக்க நடவடிக்கை’’ – அஸ்வினி வைஷ்ணவ்
சென்னையில் பறக்கும் ரயில் போக்குவரத்து சேவையை, மெட்ரோ ரயில் சேவையுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள அஸ்வினை வைஷ்ணவ், ‘‘சென்னையில் பறக்கும் ரயில் போக்குவரத்து சேவையை, மெட்ரோ ரயில் சேவையுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பறக்கும் ரயில் போக்குவரத்து சேவையின் சொத்துகள், பராமரிப்பு மற்றும் செயல்பாடுகளை தமிழக அரசிடம் ஒப்படைப்பதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் இடையே விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. தற்போது ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
அத்திப்பட்டு – கும்மிடிபூண்டி இடையே 22.52 கிமீ நீளத்திற்கு 3-வது மற்றும் 4-வது வழித்தடம் அமைப்பற்கான ஒப்புதல் அண்மையில் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அண்மை ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல்வேறு ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவ..
வடகலை, தென்கலை பிரச்சினையில் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
வல்லம் ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயிலில் ஏற்பட்ட வடகலை, தென்கலை பிரச்சினையில் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்த பத்ரி நாராயணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. கோயில் முழுமையாக வடகலை ஸ்ரீ வைஷ்ணவ சமயம் மற்றும் பாஞ்சராத்ர ஆகமத்தை பின்பற்றும் கோயில். தற்போது வைகானச ஆகமப்படி குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே வல்லம் ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயில் குடமுழக்கை வைகானச ஆகமத்தை பின்பற்றி நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, தென்கலை நாமத்தை அகற்றி வடகலை நாமத்தை மீண்டும் நிறுவவும், உரிய பரிகாரத்தை செய்து பாஞ்சராத்ர ஆகமப்படி குடமுழுக்கை நடத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ண அமர்வு, “இந்து சமய அறநிலையத் துறையில் இந்த கோயில் தென்கலை முறையை பின்பற்றுகிறது என ஆவணங்கள் ஏதும் பராமரிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினர..
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ள கச்சத்தீவு தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை பெப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் நடத்த யாழ்ப்பாண மாவட்ட செயலகம் ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், மேலும் குறித்த நிகழ்விற்கு தேவையான உள்கட்டமைப்பை நிறுவுவதற்கு இலங்கை கடற்படை தொழில்நுட்பம், வளம் மற்றும் மனிதவள ஆதரவை வழங்கி வருகிறது.
அதன்படி, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் மேற்பார்வையில், புனித அந்தோனியார் தேவாலயத்தின் தேவாலயத்தில் நடைபெரும் வருடாந்த திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தற்காலிக கப்பல் நிலையங் அமைத்தல், குடிநீருக்கான நீர் அமைப்புகளை அமைத்தல், சுகாதார வசதிகள், தற்காலிக அறைகள் மற்றும் தற்காலிக பாதைகள் நிறுவுவதுடன் மின்சார வசதிகளை நிறுவுதல் ஆகியவை இந்த நாட்களில் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்தர்களைப் பாதுகாக்க உயிர்காப்பாளர்களை நிறுத்தக்கூடிய இடங்களையும், மருத்துவ வசதிகளை வழங்க தற்காலிக மருத்துவமனையை நிர்மாணிப்பதையும் கடற்படை கண்டறிந்து வருவதுடன், கடற்படையின் உதவியுடன் அம..
