மதுரை ‘எய்ம்ஸ்’ திறக்கப்படுமா?

Download 3 2

பிரதமர் மோடி மதுரைக்கு இம்மாதம் 28-ம் தேதி வருவதால், சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இப்போது தென் மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சென்னை மதுராந்தத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போதே அந்த பொதுக் கூட்டம், மதுரையில்தான் முதலில் நடப்பதாக இருந்தது. பின்னர் அதற்கான இடமும் பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் சென்னைக்கு இந்த பொதுக் கூட்டம் அவசரம் அவசரமாக மாற்றப்பட்டது. அப்போதே ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை திறப்பதற்குதான், அந்த பொதுக் கூட்டம் மதுரையில் நடத்த திட்டமிடுவதாக கூறப்பட்டது.

இதனிடையே, தற்போது திடீரென்று தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் பிப்ரவரி 28-ஆம் தேதி பிரதமர் மோடி, மதுரையில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். அப்போது அவர், மதுரை தோப்பூர் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால், இது தொடர்பான எந்த அதிகாரபூர்வ தகவலும் வராத நிலையில் ‘எய்மஸ்’ நிர்வாகமும், பாஜகவும் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதனால், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திறக்க வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

ஏனெனில் கடந்த சட்டமன்ற தேர்தலில் துணை முதல்வர் உதயநிதி, ஒற்றை செங்கலுடன் வந்து ‘எய்ம்ஸ் எங்கே..?’ என்று கேள்வியெழுப்பி பெரும் விவாதத்தை கிளப்பினார். அதனால், அதற்கு இந்த முறையும் இடம்கொடுக்காமல் இருக்கவே, ‘எய்ம்ஸ்’ பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருவதாகவும், பிரதமரை வைத்து பணிகள் முடிந்தளவுக்கு கல்லூரி கட்டிடத்தை திறந்து அடுத்த கல்வி ஆண்டு முதல் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரியை ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த முறையும் ‘எய்ம்ஸ்’ திறக்கப்படாவிட்டால் அதை வைத்து அரசியல் செய்யலாம் என திமுக திட்டமிட்ட நிலையில், இந்த மருத்துவமனை திறக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி திறந்து வைக்கும் அளவுக்கு மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டிடப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், பணிகளில் மிகப் பெரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் வீடியோ, புகைப்படங்களை ‘எய்ம்ஸ்’ நிர்வாகம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறது. ஆனால், ‘எய்ம்ஸ்’ கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்தில் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

இது குறித்து கடந்த வாரம் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டிடப் பணி நடக்கும் வளாகத்திற்கு சென்று வந்த மதுரை ‘எய்ம்ஸ்’ ஆர்ஐடி ஆர்வலர் ஆர்.பாண்டியராஜா கூறுகையில், ‘‘கட்டுமானப் பணிகள் மும்முரமாக இரவு, பகலாக நடக்கிறது. மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகள் முழுமையாக முடிவதற்கு இன்னும் 4 முதல் 5 மாதங்கள் ஆகும்.

மருத்துவமனை பணிகள் தற்போதுதான் 50 சதவீதம் நிலையை எட்டியுள்ளது. மீதமுள்ள ஒட்டுமொத்தப் பணிகளும் நிறைவு பெறுவதற்கு ஓர் ஆண்டுக்கு மேலாகும். தற்போது உணவுக் கூடத்தின் பணிகள் மட்டும் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மாணவ, மாணவிகள் விடுதிகளுக்குான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

அதனால், மருத்துவக் கல்லூரியை பயன்பாட்டுக்கு கொண்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனென்னில், தற்போது மருத்துவக் கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்தாலும், அதன் வகுப்புகள் அடு்த்த கல்வியாண்டு முதல்தான் தொடங்கும். அதற்குள் கல்லூரி கட்டிட முழுமையான பணிகளை முடித்துவிடலாம் என திட்டமிடலாம். அதனால், கல்லூரி கட்டிடம் முடிந்தளவுக்கு பெயின்டிங் அடிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Posts

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் வரலாற்றுச் சாதனை

 2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை அளவிலான விமானப் பயணிகளைக் கையாண்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.2013 ஆம் ஆண்டு இந்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பதிவான அதிகூடிய பயணிகளின்…

Read more

அரசு இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுவது கண்டிக்கத்தக்கது

 மன்னார் – புத்தளம் பாதையை திறந்து மக்கள் பாவனைக்கு விடுவோம் என தேர்தல் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அனுர குமாரவின் அரசு, 15 வருடங்களுக்கு முன் அப் பாதைக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்த இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுவது கண்டிக்ககூடியவது…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

Jeffrey Epstein தொடர்பான ஆவணத்தில் இலங்கையின் பெயரும்!

அமெரிக்க நீதித்துறை இணையத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான ஆவணக் காப்பகத்தில், ‘இலங்கை’ என்ற பெயர் 188 தேடல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், பயணத் தொடர்புகள், தொடர்பாடல் குறிப்புகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடனான உரையாடல்களில் இலங்கையின் பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இவை பெரும்பாலும் தற்செயலான நிகழ்வுகளாகவே அமைந்துள்ளன.
தனிநபர்கள் இலங்கைக்குச் சென்றமை அல்லது அங்கிருந்து திரும்பியமை குறித்த தகவல்கள், வசிப்பிட விபரங்கள், கல்விசார் குறிப்புகள், நேர வலயங்கள் மற்றும் பொதுவான உரையாடல்கள், இலங்கையில் தங்கியிருந்தமை அல்லது அங்கு செல்வதற்கான திட்டங்கள் போன்ற சாதாரண உரையாடல்கள் என்பன அவற்றில் உள்ளடங்கும்.
இந்தத் தேடல் முடிவுகளின் அடிப்படையில், எப்ஸ்டீனின் குற்றச்செயல்களுடன் இலங்கை ஒரு முக்கிய இடமாக இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான தகவல்கள் தற்செயலாகக் குறிப்பிடப்பட்டவையே தவிர, குற்றச்சாட்டுக..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

சிங்களவர்கள் சமஸ்டியை எதிர்ப்பதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் : கம்மன்பில

சிங்களவர்கள் ஏன் சமஷ்டியை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து போதிய ஆய்வுகளோ, தெளிவுபடுத்தல்களோ இல்லாத நிலையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு விடயத்தில் முன்னோக்கி நகர முடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்கும் நோக்கில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். “அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்துப் பேசப்படுவது ஆரோக்கியமானதொரு விடயம் என்றாலும், கடந்த காலங்களிலும் இதுபற்றி பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு, பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டன” என்று அவர் தெரிவித்தார்.
அவ்வாறிருக்கையில் முன்னைய முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன என்று நிச்சயமாக ஆராயவேண்டும்.
அத்தோல்விக்கான காரணத்தைக் கண்டறியாமல் இவ்விடயத்தில் முன்னோக்கி நகரமுடியாது.
பெரும்பான்மையானோர் ஒருமித்த நாட்டையும், சிறுபான்மையானோர் சமஷ்டி முறைமையையும் வலியுறுத்தும் போக்கும், அது சார்ந்த பிரிவினையும் நாட்டில் பல தசாப்த காலமாக நிலவுகின்றது.
அந்தப் பிரிவினைகள் முன்னைய அரசியலமைப்பு முன்மொழிவுகளிலும்..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

ஐக்கிய தேசிய கட்சியை புதிய தலைமுறையிடம் கையளிக்க தயார்: ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியை புதிய தலைமுறையினரிடம் கையளிக்கத் தயாராகி வருவதாக அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ‘Smart UNP’ டிஜிட்டல் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போர் நிறைவடைந்த பின்னர் பிறந்த ‘Zen Beta’ தலைமுறை இளைஞர்களிடம் கட்சியினதும், தேசத்தினதும் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டிய காலம் கனிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு “எனக்கு இப்போது 70 வயதுக்கு மேல் ஆகிறது. இங்குள்ளவர்களில் பலருக்கு 70, 60 மற்றும் 50 வயதுக்கு மேல் ஆகிறது. இனிவரும் காலம் இளைஞர்களுக்கானது,” என அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க ‘Baby Boomers’ தலைமுறைக்காக நாட்டைத் தயார் செய்தார், ஜே.ஆர்.ஜயவர்தன மில்லினியல் (Millennials) தலைமுறையை உருவாக்கினார். அதேபோல், தான் இந்தப் புதிய தலைமுறையிடம் அதிகாரத்தை வழங்கத் தயாராக இருப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப்பின் ப..

Read more

டித்வா புயல்: கண்டியில் நிவாரண திட்டங்கள்

 ‘டித்வா’ புயலினால் கண்டி மாவட்டத்தில் முழுமையான மற்றும் பகுதியளவு வீடுகள் சேதமடைந்த நபர்களுக்குப் புதிய வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தல், நட்டஈடு வழங்குதல் மற்றும் சில அபிவிருத்தித் திட்டங்களின் பணிகளை ஆரம்பித்தல் என்பன ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்…

Read more