டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் மீளவும் அறிவித்துள்ளது.
அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ஊடகங்களின்படி, “டி20 உலகக் கிண்ணம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் விளையாட மாட்டோம் என்ற தெளிவான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்” என்று ஷெரீப் தெரிவித்துள்ளார்.
மிகவும், கவனமாக ஆலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இந்த முடிவு மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டுகளில் அரசியல் தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்திய ஷெரீப், ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர் இந்த விடயம் முழுமையாக மதிப்பிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எந்தவொரு குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்காமல், பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடாது என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இந்த லீக் போட்டியானது, எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
எவ்வாறாயினும், பாகிஸ..
Read more