இலங்கையில் சிறுவர்கள் யாசகம் எடுப்பது அதிகரிப்பு

Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

சிறுவர்களை யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தரவு அறிக்கைகள் இதனை தெரிவித்துள்ளன.

இதன்படி, சிறுவர்கள் யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சபைக்கு கடந்த ஆண்டு முதல் 287 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில், சிறுவர்கள் யாசகம் எடுப்பது தொடர்பாக அதிகாரசபைக்கு 237 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இந்த விடயம் குறித்து பேசிய மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, கடந்த காலங்களில் சிறுவர்கள் தொடர்பான சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததாகக் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விடயத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts

Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

ட்ரம்பிற்குச் சவால் விடும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகிலும் வாழ்கிறோம்

ஐக்கிய தேசியக் கட்சி ‘ஸ்மார்ட்’ அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்திற்காகத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ‘SMART UNP’டிஜிட்டல் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் பிறந்த தலைமுறையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய நேரம் இது வந்துவிட்டது.
அரசியல் கட்சிகளையும் அரசியலையும் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னின்று செயல்பட வேண்டும்.
மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ‘மில்லினியர் தலைமுறையைத் தயார்படுத்தினார். நாம் இப்போது ’ஜென் ஷீ’ தலைமுறையிடம் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக வேண்டும்.
நாம் ஸ்மார்ட் அரசியலை நோக்கி நகர வேண்டும் மற்றும் தொழில்நுட்பங்களைத் தழுவ வேண்டும்.
ஜே.ஆர். ஜயவர்தனவின் யுகத்தில் நாம் இல்லை. நாம் ட்ரம்பின் உலகில் வாழ்கிறோம்.
அதே சமயம் ட்ரம்பிற்குச் சவால் விடும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகிலும் வாழ்கிறோம்.
எமத..

Read more
Img 20260205 Wa0011

தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்: யாழில் அஞ்சலி

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.
04.02.1957 அன்று இலங்கையின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர்.
திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், சிங்கள அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின் துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69,வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல் பணிமனையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜன் அவர்களின் உருவ..

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

இலங்கை மீனவர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு: இந்தியத் தூதரகம் மறுப்பு!

இலங்கை மீனவர்கள் சிலர், ஜனவரி 29 ஆம் திகதி கடலில் வைத்து இந்தியக் கடற்படையினராலோ அல்லது இந்தியக் கடலோரக் காவல் படையினராலோ தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்தியக் கடற்படையினராலோ அல்லது இந்தியக் கடலோரக் காவல் படையினராலோ இலங்கை மீனவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் மனிதாபிமான அணுகுமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Read more

கடமைகளை பொறுப்பேற்றார் புதிய கணக்காய்வாளர் நாயகம்

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று (5) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். இலங்கையின் 42-வது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள அவர், இந்த பதவிக்கு தெரிவான முதல் பெண் என்ற பெருமையையும்…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த இந்திய பிரதமர்

கொழும்பிலுள்ள புனித கங்காராமை விகாரையில் புனித தேவ்னிமோரி சின்னங்களின் தரிசனத்தை ஆரம்பித்துவைத்தமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தள பதிவொன்றில் இந்திய பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
2025 ஏப்ரலில் எனது விஜயத்தின்போது இச்சின்னங்களை இலங்கைக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்பட்டதுடன் அதன் அடிப்படையில் மக்கள் வழிபாட்டினை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.
நமது நாடுகள் ஆழமான நாகரீக மற்றும் ஆன்மீக பிணைப்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன.
புத்த பெருமானின் கருணை, அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த காலத்தால் அழியாத செய்தியானது தொடர்ந்து மனித குலத்துக்கு வழிகாட்டட்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள புனித கங்காராமை விகாரையில் புனித தேவ்னிமோரி சின்னங்களின் தரிசனத்தை ஆரம்பித்துவைத்தமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு நன்றி.
2025 ஏப்ரலில் எனது விஜயத்தின்போது இச்சின்னங்களை இலங்கைக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்பட்டதுடன் அதன் அடிப்படையில்&h..

Read more
Image Ca287Cde46

தெஹிவளையில் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு

தெஹிவளை பகுதியில் நேற்று (04) பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் தெஹிவளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தெஹிவளை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய ஒரு பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 3 தோட்டாக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை, இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Read more