இதே நிலைமை தொடர்ந்தால் ராஜபக்ஷ அரசு போல் இந்த அரசும் வீட்டுக்குச் செல்ல நேரிடும்

Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

அநுர அரசு தொடர்ந்தும் அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்குமாயின் நாட்டில் மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுவார்கள், ராஜபக்ஷ அரசு போல் இந்த அரசும் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரச தரப்பினர் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே மக்களின் ஆணையைக் கோரி இருந்தது. அதன் பிரகாரம் அவர்களின் வாக்குறுதிக்கமையவே மக்கள் அவர்களுக்கு ஆணை வழங்கி இருக்கின்றார்கள். ஆனால் அரசு, மக்களுக்கு வழங்கிய முக்கியமான வாக்குறுதிகளை மறந்து செயற்பட்டு வருகின்றது.

இதனால் அரசு தொடர்பில் மக்களுக்கு இருந்து வந்த நல்லெண்ணம் குறைவடைய ஆரம்பித்துள்ளது. அதனால் அரசு அந்த நிலைமையை மாற்றியமபை்பதற்காக முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை விசாரணைக்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்க ஆரம்பித்திருக்கின்றது.

ஊழல், மோசடியுடன் யாராவது சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களை விசாரணைக்கு அழைப்பதற்கு நாங்கள் எதிர்பில்லை. ஆனால் மக்கள் இதற்கு மாத்திரம் அரசுக்கு ஆணை வழங்கவில்லை. மக்கள் ஆணை வழங்கிய அனைத்து விடயங்களும் இன்று மறுபக்கத்துக்குத் திரும்பியுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாக இந்த அரச தரப்பினர் தெரிவித்தார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றுவதாகத் தெரிவித்தார்கள். இவை எதுவும் இடம்பெறவில்லை. அதேபோன்று அரசின் சுயாதீனத்தன்மை, வெளிப்படைத்தன்மை, நியமனங்கள் எதுவும் அவர்கள் தெரிவித்தது போல் செயற்படவில்லை.

அதனால் அரசின் இயலாமையை மறைத்துக்கொள்வதற்கே தற்போது, ஒருசிலரை குற்றப் புலனாய்வுக்கு அழைத்து வருகின்றார்கள். இந்த அரசிம் தற்போது அடக்குமுறை மாத்திரமே எஞ்சி இருக்கின்றது. அரசு ஒன்று அடக்குமுறையை மேற்கொள்ளத் தீர்மானிப்பது என்பது அது அந்த அரசின் பலவீனமாகும்.

இந்த அரசும் தற்போது அதனையே கையில் எடுத்திருக்கின்றது. அதேநேரம் இன்று நாடுபூராகவும் அரச வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. வைத்தியர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருக்கின்றது. அதனால் அரசு அவர்களுடன் கலந்துரையாடி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts

அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30% குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பாராளுமன்றத்தில் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பாக இன்று அறிவித்தார் மின்சாரக் கட்டணக் குறைப்பு: முக்கிய விபரங்கள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் படி: • வாக்குறுதி: அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்…

Read more

வாக்குறுதி அளித்தபடி மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும்!

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய அவர், மின் அலகு ஒன்றிற்கான சராசரி உற்பத்திச் செலவு ஏற்கனவே 37 ரூபாவிலிருந்து 29 ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளது…

Read more

இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவி பாத்திமா நஷீமா, கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவு #பொலன்னறுவை

பொலன்னறுவை, முஸ்லிம் கொலனி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர், தனது வீட்டிலேயே கோடாரியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த 17 வயதுடைய என். பாத்திமா நஷீமா என்ற மாணவியே…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

இலங்கையில் சிறுவர்களை யாசகம் எடுக்க கட்டாயப்படுத்துவது அதிகரிப்பு

சிறுவர்களை யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தரவு அறிக்கைகள் இதனை தெரிவித்துள்ளன.
இதன்படி, சிறுவர்கள் யாசகம் எடுக்க கட்டாயப்படுத்தப்படுவது தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை சபைக்கு கடந்த ஆண்டு முதல் 287 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், சிறுவர்கள் யாசகம் எடுப்பது தொடர்பாக அதிகாரசபைக்கு 237 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
இந்த விடயம் குறித்து பேசிய மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன, கடந்த காலங்களில் சிறுவர்கள் தொடர்பான சட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததாகக் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தற்போது மீட்டெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த விடயத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more
பேர்லினில்-உறைபனி-விமானப்-போக்குவரத்து-நிறுத்தம்

பேர்லினில் உறைபனி விமானப் போக்குவரத்து நிறுத்தம்

உறைபனி மழை காரணமாக விமானங்கள் பனியை அகற்ற முடியாததால், வியாழக்கிழமை காலை பெர்லின் பிராண்டன்பர்க் விமான நிலையத்தில் புறப்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.காலை 10:15 மணி நிலவரப்படி, விமானங்கள் எதுவும் புறப்படவில்லை என்று விமான கண்காணிப்பு…

Read more
Cropped Whatsapp Image 2022 06 08 At 2.00.18 Pm

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்கள்! மும்பைக்கு அனுப்பப்படும் சிறப்பு விமானம்

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச சாரணர் முகாமில் பங்கேற்ற சுமார் 70 இலங்கை பாசடாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடன் வந்த ஊழியர்கள் நேற்று (04) அதிகாலை முதல் மும்பை விமான நிலையத்தில் சிக்கித் தவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் உள்ள பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, நேற்று அதிகாலை 5.00 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 142 மூலம் நாடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், அந்தக் குழு சரியான நேரத்தில் விமான நிலையத்திற்கு வரத் தவறியதால், விமானம் பல காலி இருக்கைகளுடன் கட்டுநாயக்காவுக்குப் புறப்பட்டது.
மும்பை விமான நிலையத்திற்குச் செல்லும் பாதையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்பட்டதாகவும், இதனால் சாரணர் குழு திட்டமிட்டபடி விமான நிலையத்தை அடைவது தடைப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் விளைவாக, இன்று பிற்பகல் வரை இலங்கைக்குத் திரும்புவது குறித்து அந்தக் குழு நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டது.
நிலைமையைத் தொடர்ந்து, அரசாங்கம் தலையிட்டு, சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர ஒரு சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளது..

Read more