சகல அரசியல் சிவில் அமைப்புகளும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும் – சஜித்


 சுதந்திர தினத்தில் சகல அரசியல் சிவில் அமைப்புகளும் முழு மக்களும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும். நாம் இனம், மதம் அல்லது வேறு காரணிகளால் பிரிந்து செல்லாது ஒன்றிணைந்ததன் மூலமே சுதந்திரத்தைப் பெற்றோம். இந்தத் தருணத்திலும் நாட்டுக்குத் தேவையானது அத்தகைய ஒற்றுமையேயாகுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அவரின் வாழ்த்துச் செய்தியில் மேலும்,1948 பெப்ரவரி 04 ஆம் திகதி நாம் பெற்ற சுதந்திரத்துக்கு 78 ஆண்டுகள் நிறைவடையும் இந்தத் தருணத்தில் அந்த வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதோடு எதிர்காலத்தில் கவனம் செலுத்துவது மிக முக்கியமான விடயமாகும். கடந்த 78 ஆண்டுகளில் பக்கச்சார்பின்றி நாட்டைப் பற்றி ஆராய்ந்தால், நாம் பெற்ற பல வெற்றிகளையும் அதேபோல் பல பின்னடைவுகளையும் அடையாளம் காண முடியும்.அவற்றைப் பற்றி விமர்சன ரீதியாக ஆராய்ந்து நிகழ்காலத்தில் செயற்படுவது சிறந்த எதிர்காலத்துக்கான அடித்தளத்தை அமைக்க உதவும் என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியமானது.ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், சுகாதாரம், கல்வி, சமூக நெறிமுறைகள், கலாசார பாரம்பரியங்கள் போன்ற துறைகளில் முன்னேற்றத்துக்காக இந்த 78 ஆண்டுகளில் பல பாராட்டத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது இரகசியமல்ல.வடக்கிலும் தெற்கிலும் ஏற்பட்ட இளைஞர் எழுச்சிகளுடன் தொடர்புடைய இரண்டு உள்நாட்டுப் போர்கள், நாம் பெற்ற சுதந்திரத்தில் நாம் அடைய வேண்டிய வெற்றிகளை ஓரளவு பலவீனப்படுத்தியது என்பது மறைக்க வேண்டிய இரகசியமல்ல. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது மக்களின் வாழ்க்கைத் தரம் சவாலுக்கு உள்ளானது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.பகுத்தறிவற்ற அரசியல் முடிவுகள், அதிகாரத்துக்காக மட்டுமே செய்யப்பட்ட திட்டங்களை மக்களிடம் பிரபலப்படுத்தி நடத்தப்பட்ட அரசியல் அதிகார மாற்றங்களில் நாட்டின் முன்னேற்றத்துக்கு ஏற்பட்ட சவாலான நிலைமையை இந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் ஆழமாக ஆராய வேண்டும்.தனிநபர் வருமானம், சுகாதாரமான ஆயுள் எதிர்பார்ப்பு, உடல் மற்றும் மன சுகாதார நிலை, சமூக ஒத்துழைப்பு, வாழ்க்கையைப் பற்றி முடிவெடுப்பதற்கான சுதந்திரம், கொடைத்தன்மை மற்றும் ஊழல் இல்லாமை ஆகியவற்றை தீர்மானமாகக் கருதும் மகிழ்ச்சி குறியீட்டைப் போலவே, உலகின் மனித வளர்ச்சிக் குறியீட்டில் அளவிடப்படும் முக்கிய அளவுகோல்களான சுகாதாரமான வாழ்க்கை, சரியான கல்வி, நல்ல வாழ்க்கைத் தரம் போன்ற அம்சங்களைப் பற்றி இன்று நாம் காண்பது திருப்திகரமான நிலை அல்ல.நாம் சுதந்திரம் பெறும்போது எதிர்பார்த்த சுதந்திர சமூகம், சுதந்திர பொருளாதாரம், சுதந்திர வாழ்க்கை மட்டுமல்லாமல், சுதந்திரத்துடன் பெறப்பட்ட ஜனநாயகம், சட்டத்தின் இறையாண்மை போன்ற விடயங்களும் இன்று சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டிய சவால்களாகவே நம் முன் காணப்படுகின்றன.இவை குறுகிய அரசியலில் கட்டமைக்கப்பட வேண்டியவை அல்லது ஒரு தரப்பினரை மட்டும் பாதிக்கும் விடயங்களாகக் கருதி புறக்கணிக்கப்பட வேண்டியவை அல்ல. எனவே, 78 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நாம் அறிவுபூர்வமாகவும் விமர்சன ரீதியாகவும் நாட்டின் சவால்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டியது, பெற்ற சுதந்திரம் நாட்டின் இறையாண்மை, சுயாதீனம் மற்றும் மக்களின் இறையாண்மையை எதிர்கால சந்ததியினருக்காக வலுப்படுத்திப் பேணுவதற்கான பொறுப்பு நமக்கு உள்ளதால் ஆகும்.அதற்காக ஜனநாயக போக்கில் உள்ள சகல சக்திகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். அதற்காக இந்த சுதந்திர தினத்தில் அனைத்து அரசியல் சிவில் அமைப்புகளும் முழு மக்களும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும். நாம் இனம், மதம் அல்லது வேறு காரணிகளால் பிரிந்து செல்லாது ஒன்றிணைந்ததன் மூலமே சுதந்திரம் பெற்றோம். இந்தத் தருணத்திலும் நாட்டுக்கு தேவையானது அத்தகைய ஒற்றுமையேயாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

தேசத்தை கட்டியெழுப்ப அனைவரின் பங்களிப்பும் அவசியம் – பிரதமர்

 விழுமியங்கள் நிறைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தனிப்பட்ட ரீதியாகவும், கூட்டு ரீதியாகவும் அனைவரினதும் பங்களிப்பைத் தாய்நாட்டிற்காக வழங்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே…

Read more

பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டாம்

 பொறுப்பற்ற வகையிலான பொய்யான தகவல்களை சமூகமயப்படுத்துவதைத் தவிர்க்குமாறு வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி எதிர்க்கட்சியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இன்று (03) பாராளுமன்றத்தில், 2023 ஆம் ஆண்டின் விவரக்குறிப்பு மற்றும் டெண்டர் முறைமைக்கு…

Read more

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழங்கும் செய்தி

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எமது தாய்நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.சுதந்திரம் என்பது நீதியை நிலைநாட்டுதல், ஒற்றுமையைப் பேணுதல், பரஸ்பர மரியாதையையும் பொறுப்புணர்வையும் காத்தல் ஆகியவற்றை…

Read more

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் சுதந்திர தின வாழ்த்துச்செய்தி.

 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நட்பு நாடான இலங்கை குடியரசின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.  இந்த தேசியத் திருநாள் இலங்கை குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது அந்நாட்டு…

Read more
யாழ்.-பாதுகாப்பு-படைத்-தலைமையகம்-நீக்கப்பட-மாட்டாது-–-அரசாங்கம்-உறுதி

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் நீக்கப்பட மாட்டாது – அரசாங்கம் உறுதி

யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்பு படைத் தலைமையகத்தை நீக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். அரசாங்கம் அல்லது பாதுகாப்பு அமைச்சினால் அவ்வாறு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்…

Read more
ஒட்டுசுட்டானில்-சட்டவிரோத-மின்வேலியில்-சிக்கிய-5-வயது-சிறுவன்-உயிரிழப்பு

ஒட்டுசுட்டானில் சட்டவிரோத மின்வேலியில் சிக்கிய 5 வயது சிறுவன் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில்  மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த மோகனராசா லோயிதன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல்லு வெட்டுவதற்காக…

Read more