மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈடு அறவீடு!


இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டஈட்டை மீட்க முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிக்கையில், 90,242,561.21 ரூபா மின்சார சபையின் நஷ்டஈடாகவும், 2,527,500.00 ரூபா நீதிமன்ற அபராதமாகவும் இவ்வாறு அறவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சார மீட்டர்களில் மாற்றங்களைச் செய்து மின்சாரத்தைப் பெற்ற 1,259 சம்பவங்களும், கொக்கிகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்ற 72 சம்பவங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இத்தகைய சம்பவங்களால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவின் முகாமையாளர் (விசாரணை) இந்திக பெர்னாண்டோ கூறுகையில், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தில் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை பல்வேறு அந்தஸ்துகளைக் கொண்ட நபர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவித்தார். மோசடியான மின்சாரப் பயன்பாடு தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின், 011-2422259 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 1987 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கோ அழைத்து அறிவிக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts

🏆 தமிழக அரசின் விருதுகள்  – வெளியாகாத படத்துக்கு 3 விருதுகள்  – Global Tamil News

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளியாகாத ஒரு படத்திற்கு விருது வழங்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா நடிப்பில் உருவான ‘சண்டைக்காரி’ திரைப்படத்திற்கு, மூன்று பிரிவுகளில் மாநில அரசின்…

Read more

⚓ கிவுல் ஓயாதிட்டத்திற்கு எதிராக    குரல் கொடுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராகவும்  குரல் கொடுக்க வேண்டும். – Global Tamil News

மன்னார் பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் அதனால் உள்ளூர் மீனவர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் விமா்சனம் வைத்துள்ளாா் மன்னாரில் இன்று (பெப்ரவரி 3, 2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வடபகுதி மீனவர்களின்…

Read more

டொலருக்கு ஆப்பா? உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்: சவூதி அரேபியாவில் குவியும் BRICS முதலீடுகள்! – Global Tamil News

உலகப் பொருளாதாரத்தின் திசைவேகம் தற்போது கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகள் சவூதி அரேபியாவின் நிதிச் சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆர்வம் காட்டி வருகின்றன. சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பிரிக்ஸ்…

Read more

கடல்மீது சூரிய மின் நிலையம் – சீனாவின் ‘ப்ளூ எனர்ஜி’ புரட்சி! – Global Tamil News

திறந்த கடல்பரப்பின் ஒரு பகுதியை முழுமையான 1 GW சூரிய மின் நிலையமாக மாற்றி, உலகின் கவனத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பியுள்ளது சீனா. டோங்யிங் (Dongying) கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள இந்த open-sea floating solar project, உலகிலேயே மிகப்பெரிய…

Read more

6 ஆம் தரத்திற்கான எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை

 புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இது…

Read more

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தின் தலையீடு

 பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கம் தலையீடு செய்துள்ளது என பாராளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 இல் 37 ஆம் இலக்க பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் மூலம்…

Read more