மன்னார் சாந்திபுரம் விளையாட்டு மைதானத்தில் மதச் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாகவும் முரண்பாடாகவும் உருவெடுத்துள்ளது. விளையாட்டு மைதானத்தைப் பயன்படுத்தும் இளைஞர் கழகத்தினரின் எதிர்ப்பு மற்றும் அதிகாரிகளின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் இப்பகுதியில் ஒருவித பதற்றமான சூழல் நிலவுகிறது கடந்த மாதம் தனிநபர் ஒருவரால் மைதானத்தில் சிலை வைக்கப்பட்டது. இளைஞர் கழகத்தின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அது தற்காலிகமாக அருகிலுள்ள தனியார் காணிக்கு மாற்றப்பட்டது. நேற்று எவ்வித முன்னறிவிப்புமின்றி அச்சிலை மீண்டும் மைதானத்தின் அதே பழைய இடத்திற்கு கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. :அதிகாரிவழங்கிய பதில்நகரசபை தலைவர்சபையில் அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக விளையாட்டு கழகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.நகரசபை செயலாளர்இவ்வாறான சிலைகள் வைக்க சபை அனுமதி வழங்கவில்லை என்றும், அதற்கு அதிகாரமில்லை என்றும் இளைஞர் கழகத்திடம் கூறியுள்ளார். குறித்த இடத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் அதே மதச் சிலையும், 500 மீற்றர் தொலைவில் அதே மதக் கோவிலும் இருக்கும் நிலையில், இளைஞர்கள் விளையாடும் மைதானத்தில் ஏன் மீண்டும் இந்தச் செயல்பாடு? விளையாட்டுக்கழகம் மற்றும் உரிய அரச நிறுவனங்களிடம் (உள்ளூராட்சி அமைச்சு அல்லது ஆளுநர்) எவ்வித சட்டரீதியான அனுமதியும் பெறப்படாமல் இது எவ்வாறு நடந்தது? மைதானத்தைப் பயன்படுத்தும் இளைஞர் கழகம் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில், அங்கு விளையாடாத சில பொது அமைப்புகளிடம் கடிதம் பெற்று அனுமதி வழங்குவது முறையற்றது என இளைஞர்கள் வாதிடுகின்றனர். தனியார் காணியில் சிலை இருந்தபோது யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில், மைதானத்தின் எல்லைக்குள் மீண்டும் சிலை கொண்டு வரப்பட்டுள்ளமை திட்டமிட்ட ஒரு முரண்பாடான செயல்பாடாகவே விமர்சிக்கப்படுகிறது. இது தொடர்பில் ஆளுநர் அல்லது உள்ளூராட்சி அமைச்சின் நேரடி தலையீட்டை அப்பகுதி இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். Tag Words: #Mannar #Shanthipuram #SportsGroundControversy #ReligiousSymbols #YouthProtest #MannarUrbanCouncil #LKA #CommunityIssues #BreakingNewsMannar