யாழில். சர்வதேச ஈர நில தின கொண்டாட்டம் – Global Tamil News


“ஈரநிலங்கள் மற்றும் பாரம்பரிய அறிவு – கலாசார பாரம்பரிய தந்தைக்காக கொண்டாடுதல் “எனும் தொனிப்பொருளில்  சர்வதேச உலக ஈர நில தினம் நேற்றைய தினம் திங்கட்கிழமை  கொண்டாடப்பட்டது. அந்த வகையில் யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில், நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அரியாலை கிழக்கு ஈரநில பிரதேசத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன. அதன் போது, விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்று, கண்டல் தாவர மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டதுடன், விழிப்புணர்வு உரைகளுடன் ஈர நில தினம் தொடர்பாகத் தயாரிக்கப்பட்ட வழிகாட்டல் கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.   இந்நிகழ்வில் , பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு, கருத்துத் தெரிவிக்கையில், ஈர நிலங்கள் நீர் வளங்களைப் பாதுகாப்பதிலும், வெள்ள கட்டுப்பாட்டிலும், உயிரியல் பல்துறை பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றன இவற்றை நாம் பாதுகாக்க வேண்டிய அவசியம். இவ்வாறான பிரதேசங்களைப் பாதுகாத்து இயற்கைச் சமநிலையை பேணுவது முக்கியமானதாகும் என தெரிவித்தார்.நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர், யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சுற்றாடல் பிரிவு பொலிஸார், யாழ் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், தெல்லிப்பளை யூனியன் கல்லூரி சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கதாரி மாணவர்கள், பாடசாலை சுற்றாடல் கழக முன்னோடி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts

🏆 தமிழக அரசின் விருதுகள்  – வெளியாகாத படத்துக்கு 3 விருதுகள்  – Global Tamil News

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெளியாகாத ஒரு படத்திற்கு விருது வழங்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விமல் மற்றும் நடிகை ஸ்ரேயா நடிப்பில் உருவான ‘சண்டைக்காரி’ திரைப்படத்திற்கு, மூன்று பிரிவுகளில் மாநில அரசின்…

Read more

⚓ கிவுல் ஓயாதிட்டத்திற்கு எதிராக    குரல் கொடுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராகவும்  குரல் கொடுக்க வேண்டும். – Global Tamil News

மன்னார் பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் அதனால் உள்ளூர் மீனவர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்து வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் விமா்சனம் வைத்துள்ளாா் மன்னாரில் இன்று (பெப்ரவரி 3, 2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வடபகுதி மீனவர்களின்…

Read more

டொலருக்கு ஆப்பா? உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்: சவூதி அரேபியாவில் குவியும் BRICS முதலீடுகள்! – Global Tamil News

உலகப் பொருளாதாரத்தின் திசைவேகம் தற்போது கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. சீனா, ரஷ்யா மற்றும் பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகள் சவூதி அரேபியாவின் நிதிச் சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆர்வம் காட்டி வருகின்றன. சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பிரிக்ஸ்…

Read more

கடல்மீது சூரிய மின் நிலையம் – சீனாவின் ‘ப்ளூ எனர்ஜி’ புரட்சி! – Global Tamil News

திறந்த கடல்பரப்பின் ஒரு பகுதியை முழுமையான 1 GW சூரிய மின் நிலையமாக மாற்றி, உலகின் கவனத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பியுள்ளது சீனா. டோங்யிங் (Dongying) கடற்கரைக்கு அருகே அமைந்துள்ள இந்த open-sea floating solar project, உலகிலேயே மிகப்பெரிய…

Read more

6 ஆம் தரத்திற்கான எந்தவொரு மொடியூலும் நீக்கப்படவில்லை

 புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் (Modules) நீக்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இது…

Read more

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தின் தலையீடு

 பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவில் அரசாங்கம் தலையீடு செய்துள்ளது என பாராளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 இல் 37 ஆம் இலக்க பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் மூலம்…

Read more