NPP MPக்கு எதிராக – முன்னாள் பிரதிச் சபாநாயகர் பொலிஸில் முறைப்பாடு!


 முன்னாள் பிரதிச் சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமாரவுக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், ‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையைப் பயன்படுத்தி, அஜித் ராஜபக்ஷ மோசடியான முறையில் நிவாரணக் காசோலைகளைப் பெற்றுள்ளதாகச் சாந்த பத்மகுமார கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அஜித் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்: “எனது பெயர் மற்றும் நான் வகித்த கௌரவமான பதவிகளைப் பயன்படுத்தி, எனக்குப் பாரிய அவதூறு ஏற்படும் வகையில் சாந்த பத்மகுமார இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணக் காசோலையை நான் பெற்றுக்கொண்டதாக அவர் கூறுகிறார். சாந்த பத்மகுமாரவின் நடத்தை பற்றி நாடு முழுவதும் அறியும். நான் தற்போது எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் வசித்து வருகிறேன். எனக்குத் தெரிந்தவரை டித்வா புயலினால் யாருக்கும் சேதம் ஏற்படவில்லை, அப்படி ஒரு தகவலும் எனக்குக் கிடைக்கவில்லை. எனக்கு ஒரு சதமேனும் நட்டம் ஏற்படவில்லை எனும் போது, நான் யாரிடம் போய் நிவாரணம் கோருவேன்? இந்த அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டினால் எனக்கு ஏற்பட்ட அவதூறுக்கு எதிராக நான் நிச்சயமாகச் சட்ட நடவடிக்கை எடுப்பேன்.”

Related Posts

தொடர்-இலக்கங்களை-அழித்த-படகுகளில்-அத்துமீறும்-இந்திய-கடற்தொழிலாளர்கள்-–-அருகில்-சென்ற-நயினாதீவு-கடற்தொழிலாளர்கள்-மீதும்-கல்-வீச்சு

தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு

யாழ்ப்பாணம் நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை , இலங்கை…

Read more
கரிநாள்-போராட்டத்தில்-சகல-மக்களும்-திரள-வேண்டும்!

கரிநாள் போராட்டத்தில் சகல மக்களும் திரள வேண்டும்!

இலங்கையின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, எதிர்வரும் 4ஆம் திகதி வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள மாபெரும் கரிநாள் போராட்டங்களில் மக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

Read more

இலங்கையில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தள தடை? : முன்மொழிவு கையளிப்பு

இலங்கையில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான உத்தியோகபூர்வ முன்மொழிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவரும், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான இனோகா…

Read more

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் – இம்முறை வீடு வீடாகச் செல்லும் நடைமுறை இல்லை!

வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது. எனினும், இம்முறை அந்தப் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதற்கமைய, தமது வீட்டிற்குரிய…

Read more

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் கைதானவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை கடந்தது…

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” என்னும் தேசிய  போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 83,387 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு  என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம்…

Read more

சீனா – இலங்கை இடையே புதிய விமான சேவை ஆரம்பம்!

சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று, இன்று (31) பிற்பகல் பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய விமானத் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more