புதிய புத்தகத்தில் பாட்டனுக்கு பாட்டி என்றும் பாட்டிக்கு பாட்டன் என்றும் போடப்பட்டுள்ளது. – திலித்


சரியான கல்விச் சீர்திருத்தங்கள் இந்த நாட்டிற்கு அவசியமானவை என்றும், அது அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சர்வஜன பலயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.பதவிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே திலித் ஜயவீர இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.”நவீன கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் என்று நாம் கூறத் தொடங்கி இருபது வருடங்களாகிவிட்டன. இப்போது சீர்திருத்தங்கள் அவசியம். ஆனால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்டுள்ள முதலாவது அரிச்சுவடிப் புத்தகத்தில் பாட்டனுக்கு பாட்டி என்றும் பாட்டிக்கு பாட்டன் என்றும் போடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தவறுகளே உள்ளன. அரசாங்கம் கொண்டுவரும் விடயத்திற்கு நாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்று… சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறோம் என்று யாராவது சொன்னால்… அது மிகப்பெரிய முட்டாள்தனமான கதையாகும்.இதில் ஒரு ‘சிறப்பான’ புத்தகம் உள்ளது. ஆறாம் வகுப்புக்காகத் தயாரிக்கப்பட்டு புத்தகத்தில் உலகப் புகழ் பெற்ற தொழில் முயற்சியாளர்களின் பெயர்கள் உள்ளன. முதலாமவர் – ஏ.டி. ஆரியரத்ன. ஏ.டி. ஆரியரத்ன தொழில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், உலகத்தில் யார்  நினைக்கிறார்கள்? இலங்கையில் யார் நினைக்கிறார்கள்? உபாலி விஜேவர்தன வாழ்ந்த நாடு இது. அடுத்ததாக எமது சித்தாலோப முதலாளியைப் போட்டுள்ளார்கள். உலகப் புகழ் பெற்ற இரண்டாவது தொழில் முயற்சியாளர் ஹெட்டிகொட அவர்களாம். மூன்றாவது இடத்தில், சிறிய கடையொன்றை நடத்திச் செல்லும் அச்சலா என்ற எனக்குத் தெரிந்த தங்கையொருவரின் பெயரைப் போட்டுள்ளார்கள். அவருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கேட்டபோது, தனது பெயர் ஏன் போடப்பட்டுள்ளது என்று அவருக்கே தெரியவில்லை.அடுத்ததாக பில் கேட்ஸ் உள்ளார், அதன் பிறகு வாரன் பஃபெட் உள்ளார். அதன் பிறகு எலான் மஸ்க். இவர்களுக்கு இடையில்தான் ஹெட்டிகொடவின் பெயரும், ஆரியரத்னவின் பெயரும் உள்ளது. இவர்களுக்குப் பைத்தியமா? உலகப் புகழ் பெற்ற தொழில் முயற்சியாளர்கள் என்று சொல்வதற்கு இந்த நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? உலகையே அதிரவைத்த தொழில் முயற்சியாளர்கள். இப்போதும் அதிரவைக்கும் வர்த்தக நாமங்கள் எத்தனை உள்ளன? இந்தப் பக்கத்தை வாசித்த எந்தவொரு சிறுபிள்ளையும் வாழ்க்கையில் தொழில் முயற்சியான்மையைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள். அந்தத் தொகுதிகளில் என்ன இருக்கிறது என்று நீங்களே சும்மா வாசித்துப் பாருங்கள்.ஆகவே இதனைச் சீர்திருத்துங்கள் என்றே நாம் சொல்கிறோம். நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். நாங்கள் யோசனைகளை முன்வைக்கிறோம். முன்னோடித் திட்டமொன்றை ஆரம்பித்து, பெற்றோரின் கருத்துக்களைப் பெற்று, பிள்ளைகளின் கருத்துக்களைப் பெற்று, ஆசிரியர்களின் கருத்துக்களைப் பெற்று, கல்வி நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்று இதனைச் செய்வோம் என்றே சொல்கிறோம். வேண்டாம் என்று சொல்லவில்லை.”

Related Posts

பாலின மாற்ற சிகிச்சை  : இளம்பெண்ணுக்கு 2 மில்லியன் டொலர் இழப்பீடு! – Global Tamil News

அமெரிக்காவில் டீன் ஏஜ் பருவத்தில் மார்பக அகற்றும் அறுவை சிகிச்சைக்கு (Double Mastectomy) உட்படுத்தப்பட்ட 22 வயது இளம்பெண் ஒருவருக்கு, நீதிமன்ற ஜூரி குழுவினர் 2 மில்லியன் டொலர் (சுமார் 60 கோடி ரூபாய்க்கும் அதிகம்) இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளனர். பாலின…

Read more

🇨🇳 சீன இராணுவம் அதியுயர் தயார் நிலையில்  -ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதற்றம்  – Global Tamil News

சீன இராணுவம் ‘போருக்கு நெருக்கமான’ (Near-War Alert) அதியுயர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகி வரும் செய்திகள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தாய்வான் விவகாரம் மற்றும் தென் சீனக் கடல் பகுதிகளில் அதிகரித்து வரும் அமெரிக்காவின் தலையீடுகளைத் தொடர்ந்து,…

Read more
தையிட்டி-விகாரைக்கு-எதிராக-கொட்டும்-மழைக்குள்ளும்-போராட்டம்

தையிட்டி விகாரைக்கு எதிராக கொட்டும் மழைக்குள்ளும் போராட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்றைய தினம்ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஒவ்வொரு பௌர்ணமி தினத்துக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்றைய…

Read more

ரணில் மீதான விசாரணை சட்டப்படிதான் நடக்கிறது…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளைப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது…

Read more

சிவில் பாதுகாப்புத் திணைக்களம் கலைக்கப்படாது! ஆனால்…

இலங்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த 15,000 பணியாளர்களை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் காவல்துறை திணைக்களங்களுக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும், இந்தத் திணைக்களம் கலைக்கப்பட மாட்டாது எனப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெளிவுபடுத்தியுள்ளார். திணைக்களத்தின் மொத்தமுள்ள…

Read more
தொடர்-இலக்கங்களை-அழித்த-படகுகளில்-அத்துமீறும்-இந்திய-கடற்தொழிலாளர்கள்-–-அருகில்-சென்ற-நயினாதீவு-கடற்தொழிலாளர்கள்-மீதும்-கல்-வீச்சு

தொடர் இலக்கங்களை அழித்த படகுகளில் அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு

யாழ்ப்பாணம் நயினாதீவு – நெடுந்தீவுக்கு இடைப்பட்ட கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பில் இந்திய துணைத்தூதரக அதிகாரிகளுக்கு காணொளி ஆதாரங்களுடன் முறையிடப்பட்டுள்ளது. நயினாதீவு கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை , இலங்கை…

Read more