👮 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்! – Global Tamil News


தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், நிர்வாகத் தேவைகளைக் கருத்திற்கொண்டு 8 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை காவல்துறை சேவையின் முக்கிய பிரிவுகளில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதிக்  காவல்துறை மா அதிபர் ஈ.எம்.ஜி.ஜே. சேரம் காலி பிரிவிலிருந்து, ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதி காவல்துறை மா அதிபர் எச்.சி.ஏ. புஷ்பகுமார காலி பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரி.எச்.ஈ.எல். பெரேரா கம்பளைப் பிரிவிலிருந்து கொழும்பு வடக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.என். குணவர்தன மொனராகலைப் பிரிவிலிருந்து காவல்துறை தலைமையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பி.ஏ.ஆர். புஷ்பகுமார கொழும்பு வடக்கு பிரிவிலிருந்து விசேட விமான நிலையப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.ஏ. உதய குமார வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பதவியிலிருந்து களுத்துறைப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார். சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் டபிள்யூ.எம்.எஸ்.பி. விக்ரமசிங்க காவல்துறை தலைமையகத்தின் மேலதிக தலைமையக நிர்வாகப் பணிப்பாளராக இருந்து, மொனராகலைப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கண்டி காவல்துறை அத்தியட்சகராகக் கடமையாற்றிய பி.டி. இலங்ககோன் கம்பளைப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. Tag Words:#SriLankaPolice #PoliceTransfers #DIG #SSP #NationalPoliceCommission #LKA #BreakingNews2026 #PoliceNews #AdministrativeChanges #SecurityUpdate

Related Posts

தரமான மனித வளம் உருவாக்கப்பட வேண்டும் – பிரதமர்

 எமது நாடு பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாப்பானதாக அமைய வேண்டுமானால், தரமான மனித வளம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், அதற்குத் தேவையான மிக முக்கியமான காரணி கல்வி எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வித்துறையில் ஒரு மாற்றத்தை…

Read more

பெப்ரவரி 02 முதல் போராட்டத்தை தீவிரப்படுத்த GMOA தீர்மானம்!

 அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி முதல் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளை…

Read more

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

Saturday, January 31, 2026 திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்! Zameera   January 31, 2026 திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர்…

Read more

🕊️ யுக்ரைன்  மீதான தாக்குதல்களை இடைநிறுத்த ரஷ்யா இணக்கம்! – Global Tamil News

யுக்ரைன் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்த (Ceasefire) ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படுகிறது….

Read more

🌊 திருகோணமலை – முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்: – Global Tamil News

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இடைப்பட்ட ஆழ்கடல் பகுதியில் இன்று (ஜனவரி 31) பிற்பகல் ஒரு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இன்று பிற்பகல் சரியாக 3:49 மணியளவில்…

Read more
யாழில்.-மாவைக்கு-சிலை-திறப்பு

யாழில். மாவைக்கு சிலை திறப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மறைந்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் பகுதியில் யாழ் – காங்கேசந்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள , தனியார் காணியில்…

Read more