🌉  இந்தியாவிடமிருந்து  இலங்கைக்கு 10 பெய்லி பாலங்கள்  – Global Tamil News


“டித்வா” புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்கட்டமைப்பை விரைவாகச் சீரமைக்க உதவும் வகையில், நட்புக்கரம் நீட்டியுள்ள இந்தியா பாதிக்கப்பட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து இணைப்புகளை உடனடியாக மீட்டெடுக்க 10 அதிநவீன பெய்லி பாலங்கis(Bailey Bridges) அனுப்பி வைத்துள்ளது இந்த உதவி, இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ள 450 மில்லியன் டொலர் பெறுமதியான பொருளாதார உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பாலங்கள் எளிதில் பொருத்தக்கூடியவை என்பதால், பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் போக்குவரத்து வசதிகள் மிகக் குறுகிய காலத்தில் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும். முதற்கட்டமாக, போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இந்தப் பாலங்கள் பொருத்தப்படவுள்ளன. இரத்தினபுரியில் அதிகளவான சிறிய மற்றும் நடுத்தர பாலங்கள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதனால் முன்னுாிமை வழங்கப்படும் அதேபோன்று தென்னிலங்கையின் உட்பிரதேச கிராமங்களுக்கான காலி மற்றும் மாத்தறை ஆகியவற்றில் இணைப்புகளை மீண்டும் ஏற்படுத்த இவை உதவும். வடக்கு மாகாணத்தில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி வீதிகளைச் சீரமைக்க இவை பயன்படுத்தப்படும். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தற்போதைய தரவுகளின்படி டித்வா (Tidva) புயலினால் 45-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய பாலங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.120-க்கும் மேற்பட்ட வீதிப் போக்குவரத்து வழிகள் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாய நிலங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்குப் பாரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 10 பெய்லி பாலங்கள், இந்தியா அறிவித்துள்ள 450 மில்லியன் டொலர் கடனுதவித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் எரிபொருள், மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான உதவிகளும் உள்ளடங்கியுள்ளன. Tag Words: #IndiaSriLanka #BaileyBridges #CycloneTidva #DisasterRelief #LKA #EconomicPackage #InfrastructureRepair #RandhirJaiswal #NeighbourhoodFirst #BreakingNews2026

Related Posts

தித்வா மீள் கட்டுமானத்தில், மலையக பெருந்தோட்ட மக்கள் மீது இன ஒதுக்கல் காட்டப்படுகிறது!

 தித்வா மீள் கட்டுமானத்தில், மலையக பெருந்தோட்ட மக்கள் மீது இன ஒதுக்கல் காட்ட படுகிறது!தித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையக பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி  வைத்துள்ளது. இது திட்டமிட்ட இன ஒதுக்கல். எமது மக்கள்…

Read more

“கீழடியை முழுமையாக யாரும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை” – அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவிப்பு! – Global Tamil News

“கீழடியை முழுமையாக யாரும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை” – அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவிப்பு! by admin January 31, 2026 written by admin January 31, 2026 தமிழகத்தின் நாகரிகத் தொன்மையை உலகறியச் செய்த கீழடி அகழாய்வு குறித்து, அதன் தொடக்ககால…

Read more

🌍 வரலாற்றில் இல்லாத அளவிலான நிதி அதிர்ச்சி! – Global Tamil News

மனித வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய Liquidation Event ஒன்று உலக சந்தைகளை உலுக்கியுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி சந்தைகளிலிருந்து சுமார் $15 Trillion (15 லட்சம் கோடி டாலர்கள்) மதிப்பு அழிந்துவிட்டது. வெள்ளி (Silver) – சுமார் 30% வீழ்ச்சியையும்,…

Read more

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளது! – Global Tamil News

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளது! by admin January 31, 2026 written by admin January 31, 2026 அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம்…

Read more

கணக்காய்வாளர் நாயகம் நியமனம் குறித்த இறுதித் தீர்மானம்

 கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பரிந்துரை குறித்து தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் ஐந்தாவது முறையாக ஒருவரது பெயர் அரசியலமைப்பு சபைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று…

Read more
காங்கோவில்-கோல்டன்-சுரங்கத்தில்-ஏற்பட்ட-நிலச்சரிவில்-227க்கும்-மேற்பட்டோர்-உயிரிழப்பு

காங்கோவில் கோல்டன் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 227க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கிழக்கு காங்கோ மாகாணமான வடக்கு கிவுவில் உள்ள கோல்டன் (coltan) சுரங்கத்தில் கனமழைக்குப் பிறகு நிலச்சரிவு ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேற்றுப் புதன்கிழமை சுரங்கம் இடிந்து விழுந்ததில் இருந்து, 227 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று மாகாண…

Read more