தரமான மனித வளம் உருவாக்கப்பட வேண்டும் – பிரதமர்


 எமது நாடு பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாப்பானதாக அமைய வேண்டுமானால், தரமான மனித வளம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், அதற்குத் தேவையான மிக முக்கியமான காரணி கல்வி எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வித்துறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும், அந்தப் பயணத்தில் எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும், தெளிவான இலக்கும் நோக்கமும் இருப்பதால் அனைத்தையும் வெற்றிகொண்டு முன்னோக்கிச் செல்வோம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார். 2023/2024 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட கல்வி கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்காக, இன்று (31) அலரி மாளிகையில் நடைபெற்ற “EDCS சிசு நெண பிரணாம” புலமைப்பரிசில் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்: 1930ஆம் ஆண்டு வெறும் 58 உறுப்பினர்களுடனும், ஒரு ரூபாய் அங்கத்துவக் கட்டணத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட கல்விச் சேவைப் பணியாளர்களின் கூட்டுறவுச் சேமிப்பு மற்றும் கடன் சங்கம் (EDCS), இன்று சுமார் 2,15,000 உறுப்பினர்களைக் கொண்டு தெற்காசியாவின் மிகப்பெரிய கூட்டுறவுச் சங்கமாக வளர்ந்திருப்பது ஒரு விசேட வெற்றியாகும். பாடசாலைக் கல்வியிலிருந்தே இன்றைய உலகிற்கு ஏற்ற வகையில் கல்வி முறையை மாற்றியமைக்க வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு நுழையும் மாணவர்கள் இந்த மாற்றத்தின் முன்னோடிகளாக மாற வேண்டும். ஆண்டுதோறும் ஆரம்பக் கல்வியில் இணையும் சுமார் மூன்று இலட்சம் மாணவர்களில், 40,000 பேர் மட்டுமே பல்கலைக்கழக வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த அரிய வாய்ப்பை நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துமாறு மாணவர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தொழிலாளர் துறை பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க உரையாற்றுகையில், “ஊழலற்ற நிர்வாகத்தின் காரணமாக, கடந்த 9 மாத காலப்பகுதியில் சங்கத்தின் நிதி ஸ்திரத்தன்மை 1,200 மில்லியன் ரூபாயிலிருந்து 1,700 மில்லியன் ரூபாய் வரை அதிகரித்துள்ளது” எனக் குறிப்பிட்டார். இம்முறை திட்டத்தின் கீழ், அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 2,292 மாணவர்களுக்காக 13.7 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி புலமைப்பரிசிலாக வழங்கப்பட்டது. ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 75,000 ரூபா வரை புலமைப்பரிசில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் லால் குமார், மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தர்ஷனி இத்தமல்கொட உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts

தித்வா மீள் கட்டுமானத்தில், மலையக பெருந்தோட்ட மக்கள் மீது இன ஒதுக்கல் காட்டப்படுகிறது!

 தித்வா மீள் கட்டுமானத்தில், மலையக பெருந்தோட்ட மக்கள் மீது இன ஒதுக்கல் காட்ட படுகிறது!தித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையக பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி  வைத்துள்ளது. இது திட்டமிட்ட இன ஒதுக்கல். எமது மக்கள்…

Read more

“கீழடியை முழுமையாக யாரும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை” – அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவிப்பு! – Global Tamil News

“கீழடியை முழுமையாக யாரும் இன்னும் புரிந்துகொள்ளவில்லை” – அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவிப்பு! by admin January 31, 2026 written by admin January 31, 2026 தமிழகத்தின் நாகரிகத் தொன்மையை உலகறியச் செய்த கீழடி அகழாய்வு குறித்து, அதன் தொடக்ககால…

Read more

🌍 வரலாற்றில் இல்லாத அளவிலான நிதி அதிர்ச்சி! – Global Tamil News

மனித வரலாற்றில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய Liquidation Event ஒன்று உலக சந்தைகளை உலுக்கியுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி சந்தைகளிலிருந்து சுமார் $15 Trillion (15 லட்சம் கோடி டாலர்கள்) மதிப்பு அழிந்துவிட்டது. வெள்ளி (Silver) – சுமார் 30% வீழ்ச்சியையும்,…

Read more

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளது! – Global Tamil News

அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளது! by admin January 31, 2026 written by admin January 31, 2026 அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை குறையும் நிலை உருவாகியுள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம்…

Read more

கணக்காய்வாளர் நாயகம் நியமனம் குறித்த இறுதித் தீர்மானம்

 கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பரிந்துரை குறித்து தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் ஐந்தாவது முறையாக ஒருவரது பெயர் அரசியலமைப்பு சபைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று…

Read more
காங்கோவில்-கோல்டன்-சுரங்கத்தில்-ஏற்பட்ட-நிலச்சரிவில்-227க்கும்-மேற்பட்டோர்-உயிரிழப்பு

காங்கோவில் கோல்டன் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 227க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

கிழக்கு காங்கோ மாகாணமான வடக்கு கிவுவில் உள்ள கோல்டன் (coltan) சுரங்கத்தில் கனமழைக்குப் பிறகு நிலச்சரிவு ஏற்பட்டு 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேற்றுப் புதன்கிழமை சுரங்கம் இடிந்து விழுந்ததில் இருந்து, 227 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று மாகாண…

Read more