⚖️  வெளியேறத் தவறிய பெண்ணுக்கு $9.41 லட்சம் அபராதம் விதித்த ட்ரம்ப் நிர்வாகம் – Global Tamil News


அமெரிக்காவின் தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம், சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான தனது கடுமையான கொள்கைகளை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாட்டிலிருந்து சுயமாக வெளியேறத் தவறிய பெண் ஒருவருக்கு எதிராக 941,000 டாலர் (சுமார் 28 கோடி இலங்கை ரூபாய்) அபராதம் விதித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்கக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (ICE) உத்தரவை மீறி, சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காக இந்த மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டும், அவர் குறித்த காலத்திற்குள் ‘சுயமாக வெளியேறத் (Self-Deport)’ தவறியுள்ளதாக தொிவிக்கப்பட்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது $941,000. இது அமெரிக்க வரலாற்றில் ஒரு தனிநபர் மீது குடியேற்ற விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட மிக உயர்ந்த அபராதங்களில் ஒன்றாகும். “சட்டத்தை மதிக்காதவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை” என ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியேற்ற விதிகளை மீறுபவர்கள் மீது இனி வெறும் நாடுகடத்தல் (Deportation) மட்டுமல்லாமல், பாரிய நிதி அபராதங்களும் விதிக்கப்படும் என்பதை இது காட்டுகிறது. அதிபர் ட்ரம்ப் பதவியேற்றது முதல், சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தப் பல்வேறு புதிய சட்டங்களையும் அபராதங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார். இது அதன் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது.

Related Posts

சிரியாவில்-குர்திஷ்-படைகளும்-மற்றும்-அரசாங்கமும்-ஒருங்கிணைப்பு-ஒப்பந்தத்தில்-உடன்பட்டன

சிரியாவில் குர்திஷ் படைகளும் மற்றும் அரசாங்கமும் ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தில் உடன்பட்டன

குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகள் (SDF) வெள்ளிக்கிழமை ஒரு விரிவான போர்நிறுத்தத்திற்கும், இராணுவ மற்றும் நிர்வாக அமைப்புகளை சிரிய அரசில் படிப்படியாக ஒருங்கிணைப்பதற்கும் ஒப்புக்கொண்டதாக அறிவித்தன .இந்த ஒப்பந்தத்தை சிரிய அரசாங்கம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியது.வடகிழக்கு சிரியாவில் ஒரு…

Read more
திருமணமாகாத-தம்பதியினர்-உடலுறவு-மற்றும்-மது-அருந்தியமைக்காக-140-முறை-பிரம்படி

திருமணமாகாத தம்பதியினர் உடலுறவு மற்றும் மது அருந்தியமைக்காக 140 முறை பிரம்படி

இந்தோனேசியாவில் திருமணமாகாத தம்பதியினர் வெளியே உடலுறவு கொண்டதற்காகவும், மது அருந்தியதற்காகவும் 140 முறை பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இச்செயல் ஷரியா அல்லது இஸ்லாமிய மதச் சட்டத்தை மீறுகிறது.அச்சே மாகாணத்தில் நடந்த பொது இடங்களில் பிரம்படி தண்டனையாக பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள்…

Read more

60 சதவீத சாரதிகள் போதைக்கு அடிமை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

 கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர…

Read more
ஒரு-வாரத்திற்குப்-புடின்-உக்ரைனைத்-தாக்க-மாட்டார்-–-டிரம்ப்-தெரிவிப்பு

ஒரு வாரத்திற்குப் புடின் உக்ரைனைத் தாக்க மாட்டார் – டிரம்ப் தெரிவிப்பு

கடுமையான குளிர் வானிலை காரணமாக உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை ஒரு வாரத்திற்கு தாக்குவதில்லை என்று ரஷ்யாவின் விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.ரஷ்யா ஒரு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் உக்ரைனின் வோலோடிமிர்…

Read more
உக்ரைனின்-மூன்று-கிராமங்களைக்-கைப்பற்றியது-ரஷ்யா

உக்ரைனின் மூன்று கிராமங்களைக் கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் மூன்று கிராமங்களைக் கைப்பற்றியது ரஷ்யா உக்ரைனின் இரண்டு பிராந்தியங்களில் மேலும் மூன்று கிராமங்களை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன.தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள ரிச்னே மற்றும் டெர்னுவேட்…

Read more
பெலுகாஸ்ட்-விமானம்-இறுதி-தரையிறக்கத்தை-மேற்கொண்டது!

பெலுகாஸ்ட் விமானம் இறுதி தரையிறக்கத்தை மேற்கொண்டது!

புகழ்பெற்ற ‘சூப்பர் ஜம்போ’ பெலுகாஸ்ட் விமானம் இங்கிலாந்தில் வரலாற்று சிறப்புமிக்க இறுதி தரையிறக்கத்தை அடைந்தது.உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றாக ஒரு காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஏர்பஸ் பெலுகாஸ்ட் விமானம், இங்கிலாந்தை வந்தடைந்துள்ளது.அந்த விமானம் GMT நேரப்படி இன்று வியாழக்கிழமை காலை 11 மணிக்கு…

Read more