⚖️  வெளியேறத் தவறிய பெண்ணுக்கு $9.41 லட்சம் அபராதம் விதித்த ட்ரம்ப் நிர்வாகம் – Global Tamil News


அமெரிக்காவின் தற்போதைய ட்ரம்ப் நிர்வாகம், சட்டவிரோதக் குடியேற்றவாசிகளுக்கு எதிரான தனது கடுமையான கொள்கைகளை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, நாட்டிலிருந்து சுயமாக வெளியேறத் தவறிய பெண் ஒருவருக்கு எதிராக 941,000 டாலர் (சுமார் 28 கோடி இலங்கை ரூபாய்) அபராதம் விதித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்கக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் (ICE) உத்தரவை மீறி, சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததற்காக இந்த மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டும், அவர் குறித்த காலத்திற்குள் ‘சுயமாக வெளியேறத் (Self-Deport)’ தவறியுள்ளதாக தொிவிக்கப்பட்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது $941,000. இது அமெரிக்க வரலாற்றில் ஒரு தனிநபர் மீது குடியேற்ற விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட மிக உயர்ந்த அபராதங்களில் ஒன்றாகும். “சட்டத்தை மதிக்காதவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை” என ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கான குடியேற்றவாசிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியேற்ற விதிகளை மீறுபவர்கள் மீது இனி வெறும் நாடுகடத்தல் (Deportation) மட்டுமல்லாமல், பாரிய நிதி அபராதங்களும் விதிக்கப்படும் என்பதை இது காட்டுகிறது. அதிபர் ட்ரம்ப் பதவியேற்றது முதல், சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தப் பல்வேறு புதிய சட்டங்களையும் அபராதங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார். இது அதன் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது.

Related Posts

ஒரு-வாரத்திற்குப்-புடின்-உக்ரைனைத்-தாக்க-மாட்டார்-–-டிரம்ப்-தெரிவிப்பு

ஒரு வாரத்திற்குப் புடின் உக்ரைனைத் தாக்க மாட்டார் – டிரம்ப் தெரிவிப்பு

கடுமையான குளிர் வானிலை காரணமாக உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை ஒரு வாரத்திற்கு தாக்குவதில்லை என்று ரஷ்யாவின் விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.ரஷ்யா ஒரு ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் உக்ரைனின் வோலோடிமிர்…

Read more
உக்ரைனின்-மூன்று-கிராமங்களைக்-கைப்பற்றியது-ரஷ்யா

உக்ரைனின் மூன்று கிராமங்களைக் கைப்பற்றியது ரஷ்யா

உக்ரைனின் மூன்று கிராமங்களைக் கைப்பற்றியது ரஷ்யா உக்ரைனின் இரண்டு பிராந்தியங்களில் மேலும் மூன்று கிராமங்களை ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அரசு செய்தி நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டன.தென்கிழக்கு சபோரிஜியா பகுதியில் உள்ள ரிச்னே மற்றும் டெர்னுவேட்…

Read more
பெலுகாஸ்ட்-விமானம்-இறுதி-தரையிறக்கத்தை-மேற்கொண்டது!

பெலுகாஸ்ட் விமானம் இறுதி தரையிறக்கத்தை மேற்கொண்டது!

புகழ்பெற்ற ‘சூப்பர் ஜம்போ’ பெலுகாஸ்ட் விமானம் இங்கிலாந்தில் வரலாற்று சிறப்புமிக்க இறுதி தரையிறக்கத்தை அடைந்தது.உலகின் மிகப்பெரிய விமானங்களில் ஒன்றாக ஒரு காலத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஏர்பஸ் பெலுகாஸ்ட் விமானம், இங்கிலாந்தை வந்தடைந்துள்ளது.அந்த விமானம் GMT நேரப்படி இன்று வியாழக்கிழமை காலை 11 மணிக்கு…

Read more

டொரிலிருந்து விலகும் உலகம்-தங்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம்! – Global Tamil News

உலகளாவிய நிதி அமைப்பில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் (Global Shift) நடைபெற்று வருகிறது. அமெரிக்க டொலரை மையமாக வைத்த கையிருப்பு அமைப்பிலிருந்து பல நாடுகள் மெதுவாக விலகி, தங்கம் போன்ற கடின சொத்துகளுக்கு (Hard Assets) மாறி வருகின்றன. இதன்…

Read more

வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் இருக்கின்றார்கள் உங்களுக்கு தெரியுமா? காவற்துறையிடம் கேள்வி! – Global Tamil News

வலி மேற்கில் திடீர் பணக்காரர்கள் எல்லாம் இருக்கின்றார்கள். எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? லிஸ்ட் தரவா? என நாடாளுமன்ற உறுப்பினரும், வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா வட்டுக்கோட்டை காவற்துறையினரை  பார்த்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கேள்வி…

Read more

சீனாவுடன் வணிக உறவுகள்: UK, கனடாவை எச்சரித்த டிரம்ப்! – Global Tamil News

சீனாவுடன் இங்கிலாந்து (UK) வணிக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கையுடன் பதிலளித்துள்ளார். “UK சீனாவுடன் வியாபாரம் செய்வது மிக ஆபத்தானது. ஆனால் அதைவிடவும் கனடா சீனாவுடன் வியாபாரம் செய்வது இன்னும்…

Read more