சம்மாந்துறையில் பாரிய போதைப்பொருள் வேட்டை: 2 கோடியே 30 இலட்சம் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு! – Global Tamil News


by admin January 30, 2026 written by admin January 30, 2026 அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில், வீடுகளில் சூட்சுமமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான பல்வேறு வகையான போதைப்பொருட்களை சம்மாந்துறை காவற்துறையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மாமா மற்றும் மருமகன் ஆகிய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று வியாழக்கிழமை (29) அதிகாலை கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்றை பெரிய நீலாவணை காவற்துறையினர் சோதனைக்குட்படுத்தினர். இதன்போது 49 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்மாந்துறை காவல் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.என்.ஆர் பெரேராவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் படியும் சம்மாந்துறை புறநகர் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.  கல்முனை பிராந்திய உதவிக் காவற்துறை அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான குழுவினர் நடத்திய இந்தச் சோதனையில் குஷ் (Kush) கேரளா கஞ்சா ஐஸ் (ICE) ஹெரோயின் கைத்தொலைபேசிகள் மற்றும் பணம் ஆகியன மீட்கப்பட்டன.  கைது செய்யப்பட்ட 47 மற்றும் 68 வயதுடைய இரு சந்தேக நபர்களும் நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களது வீடுகளில் பாதுகாப்புக்காகவும் கண்காணிப்புக்காகவும் அதிகளவான சிசிடிவி (CCTV) கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   இந்த வெற்றிகரமான நடவடிக்கையை அடுத்து, கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிக்காவற்துறை மா அதிபர் மற்றும் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட காவற்துறை  அதிகாரிகள் சம்மாந்துறை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று, சுற்றிவளைப்பில் ஈடுபட்ட காவற்துறை ழுவினரைப் பாராட்டியதுடன் மேலதிக ஆலோசனைகளையும் வழங்கினர். சந்தேக நபர்கள் இன்று (30) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். ________________________________________ Related News

Related Posts

🪧 பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம் – 3வது நபரும் வைத்தியசாலையில்! – Global Tamil News

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் நீடித்துவரும் நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் உடல்நிலை மோசமடைந்ததால் இன்று காலை அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப்…

Read more

🍵 பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்வு –  ஒப்பந்தம் கைச்சாத்து – Global Tamil News

இலங்கை பெருந்தோட்டத் துறை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான சம்பள உயர்வு இன்று உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் வைத்து இன்று (ஜனவரி 30, வெள்ளிக்கிழமை) காலை இந்த வரலாற்றுச்…

Read more

👑 உலக திருமதி அழகிப் போட்டி –  சபீனா யூசுப் மூன்றாம் இடம் – Global Tamil News

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சபீனா யூசுப் (Sabina Yusuf) மூன்றாம் இடத்தைப் பிடித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார். இலங்கை நேரப்படி இன்று (ஜனவரி 30, வெள்ளிக்கிழமை) காலை கலிபோர்னியாவில் இந்த…

Read more

⚖️ கெஹெலிய  பணமோசடி வழக்கு – தொழிலதிபருக்கு விளக்கமறியல்! – Global Tamil News

இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்குத் தொடர்புடைய 30 மில்லியன் ரூபாய் பணமோசடி வழக்கில், பிரபல தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிரடி விசாரணையைத் தொடர்ந்து இந்த கைது…

Read more

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

 திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான உத்தரவை அறிவிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம்…

Read more

❄️ மொஸ்கோவில் 200 ஆண்டுகால  வரலாறு காணாத குளிர்! – Global Tamil News

ரசியத் தலைநகர் மொஸ்கோ (Moscow), இந்த ஜனவரி மாதத்தில் கடந்த 200 ஆண்டுகளில் காணாத மிக அதிகளவிலான பனிப்பொழிவை எதிர்கொண்டுள்ளது. மொஸ்கோ மாநிலப் பல்கலைக்கழக (Moscow State University) வானிலை ஆய்வாளர்கள் வியாழக்கிழமை இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போதைய கடும் குளிர் மற்றும்…

Read more