இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் கணிசமான வளர்ச்சி


 இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 டிசம்பரில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளின் தேவை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. கூட்டு ஆடை சங்கங்களின் பேரவை (JAAF) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதி வீழ்ச்சியடைந்த போதிலும், இந்த மூன்று பிரதான சந்தைகளும் அந்த இழப்பை ஈடுசெய்து ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2024 டிசம்பருடன் ஒப்பிடும்போது கடந்த டிசம்பரில் அமெரிகாவுக்கான ஏற்றுமதி 6.49% அதிகரித்து 178.29 மில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதியானது 6.76% அதிகரித்து 141 மில்லியன் டொலர்களாக டிசம்பரில் பதிவாகியுள்ளது. பிரித்தானியாவுக்கான ஏற்றுமதியானது 12.95% எனும் பாரிய வளர்ச்சியுடன் 55.12 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. ஏனைய சந்தைகளுக்கான ஆடை ஏற்றுமதியானது இந்தக்காலப்பகுதியில் 4.06% குறைந்து 72.8 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 2024 டிசம்பரை விட 2025 டிசம்பரில் ஏற்றுமதி வருமானம் 23.03 மில்லியன் டொலர்கள் அதிகமாகும். 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான முழு ஆண்டில், மொத்த ஆடை மற்றும் துணி ஏற்றுமதி 5.02 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டுடன் (4.76 பில்லியன் டொலர்) ஒப்பிடும்போது 5.42% (258.18 மில்லியன் டொலர்) வளர்ச்சியாகும். வருடாந்த வளர்ச்சியில் ஐரோப்பிய ஒன்றியம் 12.48% உயர்வுடன் (1.58 பில்லியன் டொலர்) முன்னிலையில் உள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 2.15% அதிகரித்து 1.95 பில்லியன் டொலர்களாகவும், ஐக்கிய இராச்சியத்திற்கான ஏற்றுமதி 0.74% உயர்வுடன் 679.66 மில்லியன் டொலர்களாகவும் காணப்பட்டது. ஏனைய நாடுகளுக்கான ஏற்றுமதி 4.80% அதிகரித்து 815.78 மில்லியன் டொலர்களாகப் பதிவானது. ஆடைத் துறையில் 5.0 பில்லியன் டொலர் இலக்கை எட்டியிருப்பது எமது ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்துவதாக கூட்டு ஆடை சங்கங்களின் பேரவை (JAAF) தெரிவித்துள்ளது. எதிர்கால வளர்ச்சியைத் தக்கவைக்க, போட்டித்திறனை மேம்படுத்துதல், விநியோக நம்பகத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் தரமான உற்பத்தியின் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதில் இத்துறை கவனம் செலுத்தும். புதிய மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளை நோக்கி எமது ஏற்றுமதியை விரிவுபடுத்துவது எமது முக்கிய திட்டமாகும் என JAAF குறிப்பிட்டுள்ளது.

Related Posts

இலங்கையிலும்-பாடசாலை-மாணவர்களுக்கு-சமூக-ஊடகங்களை-அணுக-கட்டுப்பாடு

இலங்கையிலும் பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகங்களை அணுக கட்டுப்பாடு

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குச் சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் கைப்பேசிப் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த…

Read more
நிப்பா-வைரஸ்-–-இலங்கை-கவனம்

நிப்பா வைரஸ் – இலங்கை கவனம்

இந்தியாவில் பரவி வரும் நிப்பா வைரஸ் குறித்து இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,குறித்த வைரஸ் தொடர்பாக சுகாதாரப் பிரிவினர் தீவிர அவதானம் செலுத்தியுள்ளனர்.நிப்பா என அழைக்கப்படும்…

Read more
கை,-கால்கள்-கட்டப்பட்ட-நிலையில்-சடலம்-மீட்பு

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

அநுராதபுரம் – இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில், ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர், இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் கை, கால்கள்…

Read more
மன்னாரில்-32-வருடங்களின்-பின்னர்-திறக்கப்பட்ட-வீதி

மன்னாரில் 32 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு காணப்பட்ட வீதி, மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதியானது நீண்ட காலமாக மக்கள் பயன்பாடு இன்றி மூடப்பட்டு…

Read more

2026 முதலாம் தர மாணவர் சேர்க்கை இன்று ஆரம்பம்

  2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிக்கும் நிகழ்வு இன்று (29) நடைபெறவுள்ளது. புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்குரிய பாடத்திட்டத்தை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களைச்…

Read more

அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் நாட்டில் இயங்க முடியாது என்ற நிலைமையை தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது

 (எம்.மனோசித்ரா)எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழல் இன்று இல்லை. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்துக்குள் ஒடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் நாட்டில் இயங்க முடியாது என்ற நிலைமையை தோற்றுவித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.கொழும்பிலுள்ள இலங்கை…

Read more