அருச்சுனாக்கு அச்சுறுத்தல் – பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 06பேருக்கு பிணை – Global Tamil News


தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் , நீதிமன்றில் முன்னிலையான மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறுபேரை நீதிமன்று பிணையில் செல்ல அனுமதித்தது. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான வரதராசா தனகோபி , சிவரூபன் லகீந்தன் , மனோகரன் பிரதீபன் ஆகிய மூவர் உட்பட ஆறு பேர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்ததாக தெல்லிப்பழை  காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட ஆறு பேரையும் தெல்லிப்பழை காவல்துறையினா்  டிசம்பர் மாதம் 26ஆம் திகதி காவல் நிலையத்திற்கு அழைத்து , தனித்தனியே வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர். அந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் தெல்லிப்பழை  காவல்துறையினா் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு , இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து , 06 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டது.

Related Posts

$500 மில்லியன் மதிப்புள்ள வெனிசுவேலா எண்ணெயை அமெரிக்கா விற்றது — அதில் $300 மில்லியன் வெனிசுலாவிற்கு! – Global Tamil News

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வெளியுறவு செயல்பாடுகள் தொடர்பான பிரமுகர் Secretary of State Marco Rubio, ஒரு சமீபத்திய செனட் விசாரணையில் அமெரிக்கா வெனிசுலாவில் உள்ள எண்ணெயின் முதல் பெரிய விற்பனையை முடித்துள்ளது என்று தெரிவித்தார் — அதன் மதிப்பு $500…

Read more
ஐரோப்பிய-ஆப்பிள்களில்-பூச்சிக்கொல்லி-காக்டெய்ல்கள்-கலந்திருப்பதாக-கூறுகிறது-புதிய-ஆய்வு

ஐரோப்பிய ஆப்பிள்களில் பூச்சிக்கொல்லி காக்டெய்ல்கள் கலந்திருப்பதாக கூறுகிறது புதிய ஆய்வு

பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பல பூச்சிக்கொல்லி எச்சங்களின் கலவையான காக்டெய்ல் விளைவின் தாக்கத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, பூச்சிக்கொல்லிகளை மதிப்பிடுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆபத்து மதிப்பீட்டு நடைமுறையை புதிய ஆராய்ச்சி விமர்சிக்கிறது.பதின்மூன்று ஐரோப்பிய நாடுகள் சந்தைகளிலும் பல்பொருள் அங்காடிகளிலும் ஆப்பிள்களை…

Read more
ஐரோப்பாவின்-முதல்-பிரத்யேக-ட்ரோன்-கேரியரை-உருவாக்குகிறது-போர்ச்சுகல்

ஐரோப்பாவின் முதல் பிரத்யேக ட்ரோன் கேரியரை உருவாக்குகிறது போர்ச்சுகல்

போர்ச்சுகலின் புதிய ட்ரோன் கேரியர், டி ஜோவோ II, பாரம்பரிய விமானம் தாங்கி கப்பல்களுக்கு சவால் விடும், அதிக நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைந்த செலவுகளை வழங்கும். டாமனால் €132 மில்லியனுக்கு கட்டப்பட்டது.ஐரோப்பாவின் முதல் பிரத்யேக ட்ரோன் கேரியரை போர்த்துக்கல் உருவாக்கி வருகிறது….

Read more
தொலைபேசியில்-அருச்சுனா-எம்.பி-க்கு-அச்சுறுத்தல்-விடுத்த-குற்றச்சாட்டு-–-பிரதேச-சபை-உறுப்பினர்கள்-உள்ளிட்ட-06பேருக்கு-பிணை

தொலைபேசியில் அருச்சுனா எம்.பி க்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு – பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 06பேருக்கு பிணை

தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் , நீதிமன்றில் முன்னிலையான மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறுபேரை நீதிமன்று பிணையில் செல்ல அனுமதித்தது. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா…

Read more

🚨 பாணந்துறையில்  போதையில் வாகனம் செலுத்திய 3 சாரதிகள் கைது! – Global Tamil News

பாணந்துறை பேருந்து நிலையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, கஞ்சா உட்கொண்டிருந்த மூன்று பேருந்து சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்து வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. போக்குவரத்து…

Read more
1

1

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை நாளை (30) இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இவ்வாறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான…

Read more