புதிய கல்வி சீர்திருத்தம் நாட்டிற்கு அவசியமானது


 புதிய கல்வி சீர்திருத்தம் நாட்டிற்கு அவசியமானது.அது எந்தவகையிலும் பிற்போடப்படக் கூடாது – கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்..!கல்வி சீர்திருத்தம் நாட்டிற்கு மிக அவசியமான ஒன்று என்றும், பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மிகத் தெளிவான தீர்மானத்தை எடுத்துள்ளதைப் பாராட்டுவதுடன் எந்த வகையிலும் அது பிற்போடப்படக் கூடாது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.உள்வாங்கப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பிலேயே பிரச்சினை காணப்படுகின்றது என சபையில் குறிப்பிட்ட அவர், அதில் உள்வாங்கப்பட்டுள்ள பாலினம் தொடர்பான, சில அம்சங்கள் தொடர்பில் தான் மத, சமய கலாசாரங்களுக்கு மத்தியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.அந்த விடயங்கள் அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றதே தவிர, இந்தக் கல்வி சீர்திருத்தம் நிறுத்தப்பட வேண்டும் என எவரும் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் இடம் பெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஆளும் தரப்பு எம்பிக்கள் சபையில் உரையாற்றும் போது எதிர்க்கட்சினராகிய நாம் பிரதமரை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை முன் வைப்பதாக தெரிவிக்கின்றார்கள். நாம் பிரதமர் தொடர்பில் சிறந்த மரியாதை வைத்துள்ளோம். அவர் சிறந்த குடும்ப பின்னணியைச் சேர்ந்த கல்விமான் என்ற வகையில் அவர் தொடர்பில் நாம் பெருமைப்படுகிறோம். அந்த வகையில் பிரதமருக்கு எதிராக எந்த ஒரு வார்த்தையையும் கூட நாம் பிரயோகிக்கவில்லை. அனைவரும் அதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.கல்வி சீர்திருத்தம் நாட்டிற்கு மிக அவசியமான ஒன்று. எப்போதோ மேற்கொண்டிருக்க வேண்டிய இந்த பணியை எதிர்ப்புகள் காரணமாகவும் அரசியல் ரீதியான காரணங்களுக்காகவும் செய்திருக்காத நிலையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மிகத் தெளிவான தீர்மானத்தை எடுத்துள்ளதைப் பாராட்ட வேண்டும். எந்த வகையிலும் அது பிற்போடப்படக் கூடாது என்றும் தெரிவித்தார்.

Related Posts

🚨 பாணந்துறையில்  போதையில் வாகனம் செலுத்திய 3 சாரதிகள் கைது! – Global Tamil News

பாணந்துறை பேருந்து நிலையத்தில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, கஞ்சா உட்கொண்டிருந்த மூன்று பேருந்து சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்து வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. போக்குவரத்து…

Read more
1

1

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நடவடிக்கை நாளை (30) இடம்பெறவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இவ்வாறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான…

Read more

🏛️  இலங்கைக்கு செல்லும் IMF முகாமைத்துவ பணிப்பாளர் – Global Tamil News

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா (Kristalina Georgieva) அடுத்த மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களை மதிப்பாய்வு செய்யவும், அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கவும் இந்த…

Read more

காரைநகரில் துரித கெதியில் புனரமைக்கப்படும் வீதிகள் – Global Tamil News

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்பட்ட 10 வீதிகளின் புனரமைப்பு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படும் நிலையில் , அவற்றின் சில வீதிகள் புனரமைப்பு முடிவுடையும் தருவாயில் காணப்படுகிறது. துரித கெதியில் முன்னெடுக்கப்படும் வீதி புனரமைப்பு பணிகளை நாடாளுமன்ற…

Read more

பண்டத்தரிப்பில் இருந்து   இராணுவம்  வெளியேற்றம் – பிரதேச சபை எடுத்துள்ள முக்கிய தீர்மானம் – Global Tamil News

மானிப்பாய் பிரதேச சபைக்கு சொந்தமான பண்டத்தரிப்பில் உள்ள காணியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அக்காணியில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை முற்றாக வெளியேறியுள்ளனர். காணியில் இருந்து வெளியேறிய இராணுவத்தினர் காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் கையளித்த நிலையில் , பிரதேச செயலர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி ,  காணியை மானிப்பாய் பிரதேச…

Read more

கணேமுல்லயில் 2 2 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் பெண்  கைது – Global Tamil News

கணேமுல்ல, பொல்லதே பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 22 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன்  பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாா். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று (ஜனவரி 29) அதிகாலை முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பில் இந்தச் சாதனை…

Read more