புகையிலை, மதுபானம் காரணமாக ஆண்டுதோறும் 22,000 உயிரிழப்பு


 புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதுடன், இதன் விளைவாக நாட்டிற்கு வருடத்திற்கு 225 பில்லியன் முதல் 240 பில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை குறித்து, சுகாதார, ஊடக மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இடம்பெற்ற நிறுவன ரீதியான மீளாய்வின் போதே அதிகாரிகள் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தினர்.இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கி, புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் சட்டத்தைத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க தலைமையில் குறித்த குழு கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றில் கூடியது. இதன்போது முதலாவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டன.உலகில் 104 நாடுகள் தனித்தனி சிகரெட்டுகளை விற்பனை செய்யத் தடை விதித்துள்ளதாகவும், அந்தச் சட்டத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதிகார சபை இதன்போது வலியுறுத்தியது.தனித்தனியாக சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படும் போது, அதன் பொதிகளில் உள்ள எச்சரிக்கை விளம்பரங்கள் நுகர்வோருக்குத் தெரிவதில்லை என்பதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், சிகரெட்டுகளுக்கான வரி விதிப்பானது, விலையைத் தீர்மானித்த பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் இதன்போது வலியுறுத்தினர்.இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் சட்டத் திருத்தங்கள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்களுக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

Related Posts

புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்காக, தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த விண்ணப்பங்களை ஜனவரி 28 ஆம் திகதி முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பப் படிவமானது, 2026.01.21 ஆம்…

Read more

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜூலை மாதம் !

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 30ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று வியாழக்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத…

Read more

🛑 ஈரானின் IRGC பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு! ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி முடிவு:  🌍🚫 – Global Tamil News

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையை (IRGC) பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கைக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து 27 உறுப்பு நாடுகளும் தற்போது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன. ⚖️ பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினின் நிலைப்பாட்டில் தற்பொது மாற்றம் ஏற்பட்டுள்ளது….

Read more

வடஇந்து ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா – Global Tamil News

யாழ்ப்பாணம் வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலையின் கால்கோள் விழா இன்றைய தினம் வியாழக்கிழமை பாடசாலை அதிபர் பா.யசிதரன் தலைமையில் நடைபெற்றது.  நிகழ்வில் சிறப்பு விருந்திரனாக ஓய்வு பெற்ற கல்வியாளர் கனகர் இரத்தினம் கமலநாதன் கலந்து கொண்டார். முதன்முதலில் பாடசாலைக்கு காலடி எடுத்துவைக்கும் நாள் மாணவர்களின் நினைவில்…

Read more

⚖️ காந்தாரா படத்தைக் கேலி செய்ததாக   ரன்வீர் சிங் மீது வழக்கு: – Global Tamil News

பொலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது, ‘காந்தாரா’ திரைப்படம் மற்றும் அதிலுள்ள ஆன்மீகக் கூறுகளைக் கேலி செய்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடவுள் நம்பிக்கை மற்றும் கலாச்சார விழுமியங்களை…

Read more

டிரம்பிற்கு வந்த சோதனை – அமெரிக்க ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்கக் கோரிக்கை! – Global Tamil News

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அரசியலமைப்பின் 25-வது திருத்தத்தின் (25th Amendment) கீழ் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அமெரிக்க செனட்டர் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார். 📌  சமீபகாலமாக அதிபர் டிரம்பின் சில அதிரடி முடிவுகள் மற்றும் நிர்வாகக் செயல்பாடுகள் குறித்து…

Read more