சுமந்திரன் அழைப்பு:தகுதியில்லை -கஜேந்திரகுமார்!

சுமந்திரன்-அழைப்பு:தகுதியில்லை-கஜேந்திரகுமார்!


அரசின் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துவருகின்றன்.இதனிடையே அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து போராட்டத்தில் பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.“கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டம் எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை நெடுங்கேணியில் நடைபெறும்.போராட்டத்தில் சகல மாவட்டங்களிலும் வாழும் மக்கள் திரளாக வந்து பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றோம்.இலங்கைத் தமிழரசுக் கட்சி போராட்டத்துக்கு எமது முழுமையான ஆதரவை வழங்குவதோடு பங்களிப்பையும் தொடர்ச்சியாக வழங்குமெனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.இதனிடையே முல்லைத்தீவு கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அரசாங்கம் தமிழ் பிரதேசத்தை சிங்களமயமாக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தமிழரசு கட்சி போராட்ட அழைப்பை விடுக்க தகுதியற்றவர்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.”கொக்கச்சான்குளம்” என்ற தமிழ் கிராமம் “கலாபோகஸ்” என பெயர் மாற்றப்பட்டு சிங்களமயமாக்கப்பட்டமை அனைவரும் அறிந்த விடயம். தமிழ் தேசியக் கூட்டமைப்பாக முண்டு கொடுத்த ரணில் மைத்திரி நல்லாட்சி அரசாங்கத்தில் கொக்கச்சான்குளம் கலாபோகஸ்வெல என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டது.2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் பரந்து வாழ்ந்த கொக்கச்சான்குளம் கிராம மக்களுக்கு காணி உறுதி பெற்று தருவதாக கூறி சிங்கள மக்களுக்கு; காணி உரிமம் பெற்றுக் கொடுக்கப்பட்டதற்கு தமிழரசுக்கட்சியே ஆதரவளித்ததெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Related Posts

மொஸ்கோவில்-200-ஆண்டுகளுக்கு-இல்லாத-அளவு-கடுமையான-பனிப்பொழிவு

மொஸ்கோவில் 200 ஆண்டுகளுக்கு இல்லாத அளவு கடுமையான பனிப்பொழிவு

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இந்த மாதம் 200 ஆண்டுகளுக்கும் மேலான மிகப்பெரிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக மாஸ்கோ மாநில பல்கலைக்கழக வானிலை ஆய்வாளர்கள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.சுமார் 13 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தின் படங்கள், அதன் மத்திய மாவட்டத்தில் உள்ள தெருக்களில் கடும்…

Read more

ஈழ தமிழர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு, தலைமை தாங்க அமெரிக்க காங்கிரசிடம் வல்லை சிவாஜி கோரிக்கை! – Global Tamil News

ஈழ தமிழர்கள் விடயத்தில் அமெரிக்கா தலையிட்டு, தலைமை தாங்கி, எமது நியாயமான இறைமையை மீட்டெடுப்பதற்கு உதவ வேண்டும் அவன வல்வெட்டித்துறை நகர சபை நகர பிதா எம்.கே. சிவாஜிலிங்கம் கோரியுள்ளார். அமெரிக்கா காங்கிரஸினருக்கு நன்றி தெரிவித்து, அனுப்பியுள்ள கடிதத்திலையே அவ்வாறு கோரியுள்ளார்….

Read more

🚨 ஈரானை நெருங்கும் அமெரிக்காவின் 'ஆர்மடா' போர் கப்பல்! அதிரடித திருப்பமா? – Global Tamil News

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் பிரம்மாண்டமான USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பல் தனது இருப்பிடத்தை ரகசியமாக வைக்கும் பொருட்டு Transponder-களை அணைத்துவிட்டு (Going Dark) பயணப்படுபதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 📍பாதுகாப்பு காரணங்களுக்காகவும், எதிரி…

Read more

சூடானின் தங்கத்தை சூடாக கொள்முதல் செய்யத் தொடங்கும் சவுதி அரேபியா! – Global Tamil News

சூடானின் தங்கத்தை சூடாக கொள்முதல் செய்யத் தொடங்கும் சவுதி அரேபியா! by admin January 29, 2026 written by admin January 29, 2026 யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டிடமிருந்து நேரடியாகத் தங்கத்தை இறக்குமதி செய்ய சவூதி அரேபியா முன்வந்துள்ளது….

Read more

விண்வெளியில் பூமியின் இரட்டைச் சகோதரி? – ஓர் உற்சாகமூட்டும் கண்டுபிடிப்பு! – Global Tamil News

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நம்மிடமிருந்து சுமார் 146 ஒளியாண்டுகள் தொலைவில், அச்சு அசலாக பூமியைப் போன்ற ஒரு புதிய கோளைக் கண்டுபிடித்துள்ளனர்! இது நமது பூமிக்கு மிக நெருக்கமான “இரட்டை கோள்” (Earth’s Twin) என அழைக்கப்படுகிறது. இந்த புதிய கோளுக்கு HD…

Read more
பிரிட்டிஷ்-குடிமக்கள்-விசா-இல்லாமல்-சீனா-செல்ல-அனுமதி

பிரிட்டிஷ் குடிமக்கள் விசா இல்லாமல் சீனா செல்ல அனுமதி

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, ​​பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீனாவிற்குள் விசா இல்லாத நுழைவை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.சேவைத் துறையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த…

Read more