அருச்சுனாக்கு அச்சுறுத்தல் – பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 06பேருக்கு பிணை – Global Tamil News


தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் , நீதிமன்றில் முன்னிலையான மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறுபேரை நீதிமன்று பிணையில் செல்ல அனுமதித்தது. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான வரதராசா தனகோபி , சிவரூபன் லகீந்தன் , மனோகரன் பிரதீபன் ஆகிய மூவர் உட்பட ஆறு பேர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்ததாக தெல்லிப்பழை  காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட ஆறு பேரையும் தெல்லிப்பழை காவல்துறையினா்  டிசம்பர் மாதம் 26ஆம் திகதி காவல் நிலையத்திற்கு அழைத்து , தனித்தனியே வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர். அந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் தெல்லிப்பழை  காவல்துறையினா் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு , இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து , 06 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டது.

Related Posts

🚨 ஈரானை நெருங்கும் அமெரிக்காவின் 'ஆர்மடா' போர் கப்பல்! அதிரடித திருப்பமா? – Global Tamil News

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் பிரம்மாண்டமான USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பல் தனது இருப்பிடத்தை ரகசியமாக வைக்கும் பொருட்டு Transponder-களை அணைத்துவிட்டு (Going Dark) பயணப்படுபதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 📍பாதுகாப்பு காரணங்களுக்காகவும், எதிரி…

Read more

சூடானின் தங்கத்தை சூடாக கொள்முதல் செய்யத் தொடங்கும் சவுதி அரேபியா! – Global Tamil News

சூடானின் தங்கத்தை சூடாக கொள்முதல் செய்யத் தொடங்கும் சவுதி அரேபியா! by admin January 29, 2026 written by admin January 29, 2026 யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நாட்டிடமிருந்து நேரடியாகத் தங்கத்தை இறக்குமதி செய்ய சவூதி அரேபியா முன்வந்துள்ளது….

Read more

விண்வெளியில் பூமியின் இரட்டைச் சகோதரி? – ஓர் உற்சாகமூட்டும் கண்டுபிடிப்பு! – Global Tamil News

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நம்மிடமிருந்து சுமார் 146 ஒளியாண்டுகள் தொலைவில், அச்சு அசலாக பூமியைப் போன்ற ஒரு புதிய கோளைக் கண்டுபிடித்துள்ளனர்! இது நமது பூமிக்கு மிக நெருக்கமான “இரட்டை கோள்” (Earth’s Twin) என அழைக்கப்படுகிறது. இந்த புதிய கோளுக்கு HD…

Read more
பிரிட்டிஷ்-குடிமக்கள்-விசா-இல்லாமல்-சீனா-செல்ல-அனுமதி

பிரிட்டிஷ் குடிமக்கள் விசா இல்லாமல் சீனா செல்ல அனுமதி

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீனாவுக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, ​​பிரிட்டிஷ் குடிமக்களுக்கு சீனாவிற்குள் விசா இல்லாத நுழைவை வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.சேவைத் துறையை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த…

Read more
உலக-சந்தையில்-தங்கத்தின்-விலை-வரலாற்றில்-முதல்-முறையாக-5,500-டாலர்களை-தாண்டியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,500 டாலர்களை தாண்டியது

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (29) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டாலர்களாக…

Read more

பிரித்தானியர்களுக்கு இனி சீனா செல்ல விசா தேவையில்லை! – Global Tamil News

பிரித்தானிய குடிமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! சீனாவிற்கு பயணம் செய்ய விரும்பும் பிரித்தானியர்களுக்கு விசா இல்லா நுழைவு அனுமதியை (Visa-free entry) சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) பெய்ஜிங்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது,…

Read more