அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் நாட்டில் இயங்க முடியாது என்ற நிலைமையை தோற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது


 (எம்.மனோசித்ரா)எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழல் இன்று இல்லை. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்துக்குள் ஒடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் நாட்டில் இயங்க முடியாது என்ற நிலைமையை தோற்றுவித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,இன்று எதிர்க்கட்சிகள் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழல் இல்லை. தற்போது எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் நேரத்தை வீணடிப்பதாகவும், அரசாங்கத்துக்கு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படுவதில்லை என்றும் சமூகத்தில் ஒரு நிலைப்பாடு உருவாக்கப்பட்டிருக்கிறது.இதற்கு முன்னர் சிறந்த அரசியல் முதிர்ச்சியுடையவர்கள் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் தற்போதுள்ள சபாநாயகர் பாராளுமன்றத்தில் எமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு கூட வாய்ப்புக்களை மட்டுப்படுத்தும் ஒருவராகவே காணப்படுகின்றார்.கடந்த ஆட்சி காலங்களில் ஓராண்டில் மாத்திரம் சுமார் 4000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று அவ்வாறானதொரு நிலைமை இல்லை. வேலை நிறுத்த போராட்டங்களும் முன்னெடுக்கப்படுவதில்லை.அரசாங்கத்தால் இவை பலவந்தமாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதேபோன்று தான் எதிர்க்கட்சிகளும் பாராளுமன்றத்துக்குள் ஒடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துக்கு எதிராக எந்தவொரு சக்தியும் நாட்டில் இயங்க முடியாது என்ற நிலைமையை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கு சகல எதிர்க்கட்சிகளும் கருத்து வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகளை விடுத்து ஒரே முகாமின் கீழ் இணைந்து செயற்பட வேண்டும். 2029ஆம் ஆண்டு 30 இலட்சம் இளைஞர், யுவதிகள் புதிய வாக்காளர்களாக தமது முதலாவது வாக்கினை பதிவு செய்யவுள்ளனர்.அடுத்து ஆட்சியமைக்கவுள்ள குழு என்ற ரீதியில் இந்த இளம் வாக்களார்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டியது முதலாவது அத்தியாவசிய காரணியாகும். ஆனால் தொழிநுட்பத்துடன் ஒருமித்துள்ள அவர்கள் நாம் கூறுவதை எந்தளவுக்கு ஏற்றுக் கொள்வார்கள் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும் என்றார்.

Related Posts

அரசியல் – சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு  எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக  பரப்பப்படும் அவதூறுகளுக்கு   கண்டனம். – Global Tamil News

மன்னார் மாவட்டத்தில் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு  எதிராக  போலி முக நூல்களில் முன்னெடுக்கப்படுகின்ற அவதூறு செய்திகளுக்கு  வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதோடு, பொறுப்புள்ள அதிகாரிகள் குறித்த போலி முக நூல்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என…

Read more

அரச உத்தியோகஸ்தர்களைக் கண்காணிக்கவே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது – Global Tamil News

அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லாத காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டது. பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை…

Read more

புகையிலை, மதுபானம் காரணமாக ஆண்டுதோறும் 22,000 உயிரிழப்பு

 புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதுடன், இதன் விளைவாக நாட்டிற்கு வருடத்திற்கு 225 பில்லியன் முதல் 240 பில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார…

Read more

வணிகம் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 5,000 டாலரை தாண்டியது

 வரலாற்றில் முதல் முறையாக உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டொலர் எல்லையைத் தாண்டியுள்ளது. அதற்கமைய, இன்று (29) அதிகாலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. நேற்று (28) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை…

Read more

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த சவுதியை எவரும் பயன்படுத்த முடியாது! – Global Tamil News

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த திட்டமிட்டு வரும் சூழலில், சவுதி அரேபியா வெளிப்படையாக ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சவூதி அரசின் அதிகாரப்பூர்வ பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான்,…

Read more
அரச-உத்தியோகஸ்தர்கள்-மீது-நம்பிக்கையில்லா-காரணத்தால்-தான்-பிரஜா-சக்தி-உருவாக்கப்பட்டதாம்

அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டதாம்

அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டது.பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை…

Read more