கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய சாரதி இடைநிறுத்தம் – வடமாகாண போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை

கைப்பேசியைப்-பயன்படுத்தியவாறு-பேருந்தைச்-செலுத்திய-சாரதி-இடைநிறுத்தம்-–-வடமாகாண-போக்குவரத்து-அதிகார-சபை-நடவடிக்கை


பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியைப் பயன்படுத்தியவாறு பேருந்தைச் செலுத்திய தனியார் பேருந்துச் சாரதி ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் சென்ற மற்றொரு பேருந்துச் சாரதி மற்றும் நடத்துனருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் தெரிவித்தார்.இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த 25ஆம் திகதி அன்று காலை 9.45 மணியளவில் மன்னாரிலிருந்து புறப்பட்ட தனியார் பேருந்தின் சாரதி, தனங்கிளப்பு வரையிலான பயணத்தின் போது, வீதிப் பாதுகாப்பு மற்றும் சேவை விதிமுறைகளை மீறி, கைப்பேசியில் உரையாடியவாறு பேருந்தைச் செலுத்தியமை தொடர்பில் காணொலி ஆதாரங்களுடன் முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.இம்முறைப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த பேருந்துச் சாரதி மறு அறிவித்தல் வரும் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோன்று, கடந்த 23ஆம் திகதி அன்று மதியம் 1.40 மணியளவில், மாங்குளம் மகா வித்தியாலய மாணவர்களை ஏற்றாமல் சென்ற தனியார் பேருந்து தொடர்பில், பாடசாலை நிர்வாகத்தால் அதிகார சபைக்கு எழுத்து மூலமான முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.அதற்கமைவாக, தொடர்புடைய பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களுக்கு உத்தியோகபூர்வமான கடும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.பொதுப் போக்குவரத்துச் சேவைகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இவ்வாறான விதிமீறல்கள் தொடர்பில் பொதுமக்கள் ஆதாரங்களுடன் முறைப்பாடுகளை முன்வைக்கும் பட்சத்தில்,  சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகத் தயங்காமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் 021-228 5121 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவும் முறைப்பாடுகளை வழங்க முடியும் என அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

மத்திய மலைநாட்டை மீட்க புதிய புரட்சிகரமான திட்டத்தை ஜனாதிபதி அறிவித்தார்! – Global Tamil News

இலங்கையின் இதயப்பகுதியான மத்திய மலைநாட்டின் பழைய செழுமையை மீட்டெடுக்கவும், அதன் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் இந்த ஆண்டிலேயே ஒரு புதிய அதிகாரசபையை (Authority) அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இது வெறும் நிர்வாக மாற்றமல்ல, மலைநாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு பசுமைப் புரட்சி என்கிறார்…

Read more

   புத்தர்சிலை  வைத்த  வழக்கு  – பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! – Global Tamil News

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை அமைத்தமை மற்றும் புத்தர் சிலையை வைத்தமை தொடர்பான வழக்கில், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கோட்டை வீதி, டச்பே (Dutch Bay) கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொண்டதாகத்…

Read more

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறை  – Global Tamil News

தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கெயோன் ஹி (Kim Keon Hee) அவர்களுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 20 மாதங்கள் (1 வருடம் 8 மாதங்கள்) சிறைத்தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (ஜனவரி 28, 2026)…

Read more

லண்டன் – சிட்னி இடையில் இடைவிடாத விமான சேவை – Global Tamil News

குவாண்டாஸ் (Qantas) நிறுவனத்தின் “புராஜெக்ட் சன்ரைஸ்” (Project Sunrise) திட்டம், விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையவுள்ளது. 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் லண்டன் – சிட்னி இடையிலான இந்த இடைவிடாத (Non-stop) விமான சேவை தொடங்கவுள்ளது. இதற்காக…

Read more

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கும் பொருத்தமற்றது – Global Tamil News

அரசு கொண்டு வந்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA), ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி மன்னார் மாவட்ட மீனவ சமூகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மன்னாரில் இன்று புதன்கிழமை (ஜனவரி 28, 2026) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, மீனவ கூட்டுறவு…

Read more
நிதியைத்-தவறாகப்-பயன்படுத்தியமை:-நீதிமன்றில்-முன்னிலையானர்-ரணில்!

நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை: நீதிமன்றில் முன்னிலையானர் ரணில்!

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) பிற்பகல் 1.25 மணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்தார்.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி…

Read more