முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு: – Global Tamil News


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு: மார்ச் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை! by admin January 28, 2026 written by admin January 28, 2026 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச் மாதத்தில் மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், முதல் சந்தேக நபரான ரணில் விக்கிரமசிங்க தொடர்பான அனைத்து விசாரணைகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார். மேலும், இரண்டாவது சந்தேக நபரான சமன் ஏகநாயக்க என அழைக்கப்படும்  சோமிசார பண்டார ஏகநாயக்க எனவும் அவர்  தொடர்பான விசாரணைகள் இன்னும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவை ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மீதமுள்ள விசாரணைகள் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் முடிவடைந்ததும், வழக்கின் அடுத்த கட்டமாக மேல் நீதிமன்றத்தில் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தை கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், வரவிருக்கும் மாதங்களில் முக்கிய திருப்பங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #ரணில்விக்கிரமசிங்க #மேல்நீதிமன்றம் #சட்டமாஅதிபர் #குற்றப்பத்திரிகை #இலங்கையரசியல் #நீதித்துறை #சட்டநடவடிக்கை#SriLankaPolitics#RuleOfLaw

Related Posts

📉 அமேசான்  16,000 பணியாளர்களை  பணிநீக்க  முடிவு  – Global Tamil News

அமேசான் (Amazon) நிறுவனம் தனது செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் சுமார் 16,000 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப உலகில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் நிறுவனத்தின் மறுசீரமைப்பு…

Read more
விடுதலையில்லை!

விடுதலையில்லை!

திருகோணமலை கோட்டை வீதி,டச்பே கடற்கரையில் சட்டவிரோத நிர்மாணம் ஒன்றை அமைத்தமை, அதில் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை ஆகிய குற்றங்களை புரிந்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் பௌத்த பிக்குகள் மூன்று பேர் உட்பட 10 பேரின்…

Read more
அடுத்து-கோத்தாவும்-எடுபிடிகளும்-உள்ளே?

அடுத்து கோத்தாவும் எடுபிடிகளும் உள்ளே?

2022 ஆம் ஆண்டின் மே 09 ஆம் திகதி நடந்த அமைதியின்மை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது விசுவாசிகளிற்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.‘அரகலய’ மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதலைத்…

Read more
ரணில்-மீண்டும்-உள்ளே?

ரணில் மீண்டும் உள்ளே?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முதல் சந்தேக நபரான ரணில் விக்கிரமசிங்க…

Read more

சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்!

 முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அவர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.விசாரணைகளின் பின்னர் நீதவான் இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில்…

Read more
2

2

பிரான்ஸுடன் செய்யப்பட்ட “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே” (one in, one out) என்ற ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 281 அகதிகளை பிரிட்டன் திருப்பி அனுப்பியுள்ளதாக உள்துறை அமைச்சர் ஷபானா மக்மூத் தெரிவித்துள்ளார். பிரான்ஸுடன் செய்யப்பட்ட “ஒன்று உள்ளே, ஒன்று வெளியே”…

Read more