பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகத்தை நீக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை – லக்ஷ்மன் கிரியெல்ல


 இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கோ அல்லது பணியிடை நீக்கம் செய்வதற்கோ சபாநாயகருக்கு எவ்வித சட்ட அதிகாரமும் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.எதுல்கோட்டேயிலுள்ள அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி பிரதான காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.இலங்கை நாடாளுமன்றமானது நிலையியற் கட்டளைகள் மற்றும் நாடாளுமன்ற வரப்பிரசாதங்கள் மற்றும் அதிகாரங்கள் சட்டம் ஆகிய இரண்டு முக்கிய சட்டக் கோவைகளின் கீழேயே இயங்குவதாகச் சுட்டிக்காட்டிய அவர், எமது நாட்டின் நிலையியற் கட்டளைகளின் கீழ் பிரதிச் செயலாளர் நாயகம் ஒருவரை நீக்குவதற்கான எந்தவொரு விதிமுறையும் இல்லையெனக் குறிப்பிட்டார்.இவ்வாறான சூழலில், பிரித்தானிய நாடாளுமன்ற மரபுகள் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ‘பைபிள்’ என்று போற்றப்படும் ‘Erskine May’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னுதாரணங்களைப் பின்பற்ற இலங்கை நாடாளுமன்றம் சட்ட ரீதியாகப் பிணைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு எதிராகப் புகார்கள் முன்வைக்கப்படும் போது, அவருக்கு எதிரான சாட்சியங்களின் சுருக்கத்தைத் திரட்டி அதனை முதலில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியது சபாநாயகரின் பொறுப்பாகும் என்றும், ஆனால் தற்போதைய விடயத்தில் அது இடம்பெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.அத்துடன், குறித்த அதிகாரிக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும், அவரிடம் விளக்கம் கோரப்படாமலும் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்தார்.சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டு ஒருபோதும் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க முடியாது என வலியுறுத்திய அவர், குறித்த அதிகாரிக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.தற்போதைய சபாநாயகர் புதியவர் என்பதால், சபையில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவமிக்க அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அவருக்கு இந்த மரபுகள் குறித்துத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் எனத் தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல, ஊழியர் ஆலோசனைக் குழுவிற்கு (Staff Advisory Committee) அதிகாரிகளை நீக்கும் அதிகாரம் கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.சட்டங்களை உருவாக்கும் உன்னத இடமான நாடாளுமன்றத்திலேயே இவ்வாறான மரபு மீறல்கள் இடம்பெறுவது சர்வதேச ரீதியில் நாட்டுக்குப் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும் என எச்சரித்த அவர், நாடாளுமன்றத்தின் கௌரவத்தையும் உயர் பதவிகளையும் பாதுகாக்க வேண்டியது சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பாகும் எனத் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.

Related Posts

மத்திய மலைநாட்டை மீட்க புதிய புரட்சிகரமான திட்டத்தை ஜனாதிபதி அறிவித்தார்! – Global Tamil News

இலங்கையின் இதயப்பகுதியான மத்திய மலைநாட்டின் பழைய செழுமையை மீட்டெடுக்கவும், அதன் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் இந்த ஆண்டிலேயே ஒரு புதிய அதிகாரசபையை (Authority) அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இது வெறும் நிர்வாக மாற்றமல்ல, மலைநாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு பசுமைப் புரட்சி என்கிறார்…

Read more

   புத்தர்சிலை  வைத்த  வழக்கு  – பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! – Global Tamil News

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை அமைத்தமை மற்றும் புத்தர் சிலையை வைத்தமை தொடர்பான வழக்கில், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கோட்டை வீதி, டச்பே (Dutch Bay) கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொண்டதாகத்…

Read more

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறை  – Global Tamil News

தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கெயோன் ஹி (Kim Keon Hee) அவர்களுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 20 மாதங்கள் (1 வருடம் 8 மாதங்கள்) சிறைத்தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (ஜனவரி 28, 2026)…

Read more

லண்டன் – சிட்னி இடையில் இடைவிடாத விமான சேவை – Global Tamil News

குவாண்டாஸ் (Qantas) நிறுவனத்தின் “புராஜெக்ட் சன்ரைஸ்” (Project Sunrise) திட்டம், விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையவுள்ளது. 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் லண்டன் – சிட்னி இடையிலான இந்த இடைவிடாத (Non-stop) விமான சேவை தொடங்கவுள்ளது. இதற்காக…

Read more

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கும் பொருத்தமற்றது – Global Tamil News

அரசு கொண்டு வந்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA), ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி மன்னார் மாவட்ட மீனவ சமூகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மன்னாரில் இன்று புதன்கிழமை (ஜனவரி 28, 2026) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, மீனவ கூட்டுறவு…

Read more
நிதியைத்-தவறாகப்-பயன்படுத்தியமை:-நீதிமன்றில்-முன்னிலையானர்-ரணில்!

நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை: நீதிமன்றில் முன்னிலையானர் ரணில்!

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) பிற்பகல் 1.25 மணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்தார்.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி…

Read more