நபர் ஒருவரை தாக்கிய மாநகர சபை உறுப்பினர் கைது


 முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேரா தலைமையில் இன்று (28) பிற்பகல் களுத்துறை நகரில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, நபர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் களுத்துறை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை மாநகர சபை உறுப்பினர் ஜெயநாத் நவரத்ன என்பவரே களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், போராட்ட இடத்திற்கு அருகில் தனது வாகனத்தை நிறுத்தி, “சோறு உண்ணும் மாடுகள் இன்னும் இருக்கின்றனவா? என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குறித்த மாநகர சபை உறுப்பினர் அவர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. வாதுவ, பொத்துபிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதலின் பின்னர் அவர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை, குறித்த நபர் தமது அமைதியான போராட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவித்து அந்த மாநகர சபை உறுப்பினரும் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், தாக்குதலுக்கு உள்ளானவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து முன்னாள் அமைச்சர் அஜித் பி. பெரேராவிடம் கேட்டபோது, இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள போதிலும், தான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவில்லை எனத் தெரிவித்தார். களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts

1,000 ஏக்கரில் பிரம்மாண்ட செங்குத்து விவசாய நகரம்! – Global Tamil News

90% குறைந்த நீர், 9 மடங்கு அதிக உணவு – சீனாவின் புதிய சாதனை! by admin January 28, 2026 written by admin January 28, 2026 90% குறைந்த நீர், 9 மடங்கு அதிக உணவு –…

Read more

சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல்! ஏப்ரல் 29ல் ரணில் முன்னிலையாக வேண்டும்! – Global Tamil News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான நிதி துஷ்பிரயோக வழக்கில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது….

Read more

யுத்த காலத்தில் மூடப்பட்ட வீதி  விரைவில் திறக்கப்படவுள்ளது – Global Tamil News

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நீண்ட காலமாக மூடப்பட்டு மக்கள் பாவையின்றி காணப்பட்ட வீதி மன்னார் நகர சபையால் செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. 1983-1984 ஆண்டு காலப்பகுதி வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த குறித்த வீதியானது நீண்ட காலமாக மக்கள்…

Read more
கரடிப்புலவு-கிராமத்தில்-அடித்துக்கொலை!

கரடிப்புலவு கிராமத்தில் அடித்துக்கொலை!

கரடிப்புலவு கிராமத்தில் அடித்துக்கொலை! தூயவன் Wednesday, January 28, 2026 முல்லைத்தீவு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்  கரடிப்புலவு கிராமத்தில் நேற்று (27) இரவு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு…

Read more

🌊✈️ கரீபியன் கடலில் அமெரிக்க கடற்படையின் வான்வழி வலிமை ✈️🌊 – Global Tamil News

உலகின் மிகப்பெரிய விமான தாங்கிக் கப்பலாக கருதப்படும் Ford-class USS Gerald R. Ford (CVN 78) மீது, U.S. Navy Carrier Air Wing 8-க்கு உட்பட்ட போர் விமானங்கள் ஒரே வடிவில் பறக்கும் காட்சி கரீபியன் கடலில் இடம்பெற்றது….

Read more

🌍 உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையமாக இந்தியா! – Global Tamil News

இந்தியா விரைவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு (Oil Refining Hub) மையமாக உருவெடுக்க உள்ளது. தற்போது 260 மில்லியன் டன் (MT) ஆக உள்ள நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு திறன், 300 மில்லியன் டன் (MT) ஆக உயர்த்தப்பட உள்ளதாக…

Read more