தமிழரசின் தலைவர் ,செயலாளரை சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர் – Global Tamil News


யாழ்ப்பாணத்திற்கு  பயணம்  மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன்  நேற்று முன்தினம் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினார். யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழரசு கட்சியின் தலைவர் சீ.வி.கே சிவஞானம் மற்றும் அக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் நிலைப்பாட்டினையும் கனடா தொடர்ச்சியாக ஆதரித்து வரும் பின்னணியில், அதற்காக நன்றி தெரிவித்ததோடு தொடர்ந்தும் எதிர்காலத்தில் அத்தகைய ஆதரவை நாம் நாடி நிற்கிறோம் என்பதையும் அவருக்குத் தெரியப்படுத்தினோம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Posts

சீனாவுடன் வணிக உறவுகள்: UK, கனடாவை எச்சரித்த டிரம்ப்! – Global Tamil News

சீனாவுடன் இங்கிலாந்து (UK) வணிக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கையுடன் பதிலளித்துள்ளார். “UK சீனாவுடன் வியாபாரம் செய்வது மிக ஆபத்தானது. ஆனால் அதைவிடவும் கனடா சீனாவுடன் வியாபாரம் செய்வது இன்னும்…

Read more

ஈரான்மீது அமெரிக்கா மேற்கொள்ளும் எந்தவொரு தாக்குதலிலும் பிரித்தானியா  (UK) பங்கேற்காது! – Global Tamil News

ஈரான்மீது அமெரிக்கா முன்னெடுக்கக்கூடிய இராணுவ தாக்குதலில் இங்கிலாந்து இணைவதில்லை என்று பிரித்தானிய அரசு தெளிவாக அறிவித்துள்ளது. இது சர்வதேச சட்டத்திற்கு முரணானதாக இருக்கும் என்பதோடு, மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் லண்டன் கருதுகிறது. அதனால்,…

Read more

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை

 பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் அதிகாரிகளுக்கு…

Read more

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக கொழும்பில் மக்கள் போராட்டம்

(இணையத்தள செய்தி பிரிவு)சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறக்கோரி கொழும்பில் உள்ள நீதி அமைச்சிற்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்புப் போராட்டம்…

Read more

🏆 தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு:  – Global Tamil News

தமிழக அரசு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளையும், 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விருதுகள், கலைத்துறையினரிடையே  பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

Read more

🎬  விபத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்குக் காயம்! – Global Tamil News

கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின்படி, ஒரு முக்கிய சண்டைக் காட்சியைப் (Action Sequence) படமாக்கும்போது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் அல்லது ஒரு சவாலான சண்டைக் காட்சியில் விஜய் சேதுபதி டூப் (Body Double) போடாமல் தானே நடித்தபோது இந்த…

Read more