கல்விச் சீர்திருத்தம் ஒரு கட்சியின் தனிப்பட்ட விவகாரமல்ல, அது நாட்டின் எதிர்காலம் – சாந்த பண்டார


 கல்விச் சீர்திருத்தச் செயல்பாட்டில் காணப்படுகின்ற குறைபாடுகள் அனைத்தையும் உடனடியாக நிவர்த்தி செய்து, முறையான மற்றும் திட்டமிட்ட ரீதியில் அதனை விரைவாகச் செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கல்விச் சீர்திருத்தங்களை தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் பொதுஜன கல்வி ஊழியர் சங்கம் ஆகியன தற்போதைய அரசாங்கத்திடமும் கல்வி அமைச்சிடமும் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.இந்தச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அரசாங்கத்திற்குச் சிறந்த சந்தர்ப்பம் கிடைத்த போதிலும், கல்வி அமைச்சினதும் அது சார்ந்த குழுக்களினதும் தவறு காரணமாக கல்விச் சீர்திருத்தங்கள் மேலும் ஒரு வருடம் பின்னோக்கித் தள்ளப்பட்டுள்ளதாகச் சாட்டிய அவர், இதற்கான முழுப் பொறுப்பையும் கல்வி அமைச்சே ஏற்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.கல்வித்துறை சார்ந்த இத்தனை அறிஞர்கள் இருக்கும் ஒரு சபையினால் இக்குறைபாடுகளைக் கண்டறிய முடியாமல் போனது ஏன் என்ற கேள்வி எழுவதாகவும், கல்விச் சீர்திருத்தங்களை அரசாங்கம் திட்டமிட்டே தாமதப்படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், புதிய சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைப் பாடசாலைகளில் உருவாக்க அரசாங்கம் தவறியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் இந்திய விஜயம் குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்கும் அவர் பதிலளித்தார்.இந்தியாவின் ஒடிசாவிலுள்ள KIIT பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில், குடியரசு தின விழாவில் உரையாற்றுவதற்காகவே அவர் அங்கு சென்றதாகத் தெரிவித்தார். எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் வெளிநாடுகளுக்குச் சென்று அரசாங்கத்தைப் பற்றியோ அல்லது நாட்டைப் பற்றியோ அவதூறு பரப்புவதைப் போலன்றி, நாமல் ராஜபக்ச ஒரு முதிர்ச்சியான இளம் தலைவராக நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அங்கு உரையாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குக் கிடைத்த இந்த கௌரவத்தை எண்ணி மகிழ்ச்சியடைய வேண்டுமே தவிர, அரசியல் லாபத்திற்காக மடைமாற்ற முனையக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்மேலும், தற்போது நடைபெற்று வரும் கூட்டுறவுத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி) பல இடங்களில் படுதோல்வியைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார். கூட்டுறவுத் தேர்தல் முடிவுகள் என்பது கிராமப்புற மக்களின் அரசியல் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவே முன்னொரு காலத்தில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை கிராம மட்டத்தில் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதையே இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகத் தெரிவித்தார்.

Related Posts

மத்திய மலைநாட்டை மீட்க புதிய புரட்சிகரமான திட்டத்தை ஜனாதிபதி அறிவித்தார்! – Global Tamil News

இலங்கையின் இதயப்பகுதியான மத்திய மலைநாட்டின் பழைய செழுமையை மீட்டெடுக்கவும், அதன் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் இந்த ஆண்டிலேயே ஒரு புதிய அதிகாரசபையை (Authority) அமைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இது வெறும் நிர்வாக மாற்றமல்ல, மலைநாட்டின் எதிர்காலத்திற்கான ஒரு பசுமைப் புரட்சி என்கிறார்…

Read more

   புத்தர்சிலை  வைத்த  வழக்கு  – பிக்குகள் உள்ளிட்ட 10 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! – Global Tamil News

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை அமைத்தமை மற்றும் புத்தர் சிலையை வைத்தமை தொடர்பான வழக்கில், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கோட்டை வீதி, டச்பே (Dutch Bay) கடற்கரையில் சட்டவிரோதக் கட்டுமானங்களை மேற்கொண்டதாகத்…

Read more

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு 20 மாத சிறை  – Global Tamil News

தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணி கிம் கெயோன் ஹி (Kim Keon Hee) அவர்களுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 20 மாதங்கள் (1 வருடம் 8 மாதங்கள்) சிறைத்தண்டனை விதித்து சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் இன்று (ஜனவரி 28, 2026)…

Read more

லண்டன் – சிட்னி இடையில் இடைவிடாத விமான சேவை – Global Tamil News

குவாண்டாஸ் (Qantas) நிறுவனத்தின் “புராஜெக்ட் சன்ரைஸ்” (Project Sunrise) திட்டம், விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையவுள்ளது. 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் லண்டன் – சிட்னி இடையிலான இந்த இடைவிடாத (Non-stop) விமான சேவை தொடங்கவுள்ளது. இதற்காக…

Read more

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒட்டு மொத்த இலங்கை மக்களுக்கும் பொருத்தமற்றது – Global Tamil News

அரசு கொண்டு வந்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA), ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி மன்னார் மாவட்ட மீனவ சமூகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மன்னாரில் இன்று புதன்கிழமை (ஜனவரி 28, 2026) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, மீனவ கூட்டுறவு…

Read more
நிதியைத்-தவறாகப்-பயன்படுத்தியமை:-நீதிமன்றில்-முன்னிலையானர்-ரணில்!

நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை: நீதிமன்றில் முன்னிலையானர் ரணில்!

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) பிற்பகல் 1.25 மணிக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்தார்.ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி…

Read more