ஜே.வி.பி.யின் அராஜகக் கலாசாரம் தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கிறது – ஹர்ஷண ராஜகருணா


 (எம்.மனோசித்ரா)ஜே.வி.பி.யின் உண்மையான சுபாவம் இப்போது தான் வெளிப்படுத்தப்படுகிறது. பௌத்த மதகுருமார்கள் காவி உடை அணிந்திருந்தாலும், சட்டத்தரணிகள் கருப்பு மேற்சட்டை அணிந்திருந்தாலும் அவர்கள் தம்மை எதிர்த்தால் தாம் பதில் தாக்குதல் நடத்துவோம் என அரசாங்கம் கூறுகிறது. ஜே.வி.பி.யின் அராஜகக் கலாசாரம் தற்போது அரங்கேறிக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் திங்கட்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இல்லாதவாறு இந்த அரசாங்கம் இனம், மதம் மற்றும் கலாசாரத்தின் மீது கோபம் கொண்டுள்ளது. யார் என்ன சீருடை அணிந்திருந்தாலும் தமக்கெதிராக செயற்பட்டால் பதில் தாக்குதல் நடத்துவோம் என அமைச்சர்கள் கூறுகின்றனர். ஜே.வி.பி.யின் உண்மையான சுபாவம் இப்போது தான் வெளிப்படுத்தப்படுகிறது.1980களில் தமது அரசியல் கொள்கைகளைக் கடைபிடிக்காதவர்களை இவர் இவ்வாறு தான் கொன்று குவித்தனர். ஜே.வி.பி. என்பது ஒரு பயங்கரவாத கட்சியாகும். ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியெடுக்கப்பட்டமைக்கு பொறுப்புக்கூறவேண்டிய குழுவாகும். அதனையே தற்போது அமைச்சர் லால் காந்த மீண்டும் நினைவுபடுத்துகின்றார்.பௌத்த மதகுருமார்கள் காவி உடை அணிந்திருந்தாலும், சட்டத்தரணிகள் கருப்பு மேற்சட்டை அணிந்திருந்தாலும் அது தமக்கு தேவையற்றது என்றும், தம்மை யார் எதிர்த்தாலும் அவர்களுக்கு பதில் தாக்குதல் உண்டு என்றும் அவர் குறிப்பிடுகின்றார். இது மாத்திரமல்ல தேர்தலுக்கு முன்னர் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை கிராமங்களுக்கு கொண்டு செல்வோம் எனக் கூறினார்.கம்பஹாவில் கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார். இவ்வாறு மதங்களை அடிப்படையாகக் கொண்டவர்கள் தான் இந்த நாட்டுக்கு துஷ;ட சக்திகள் என அந்த பொலிஸார் கூறியுள்ளனர். அது யாருடைய நிலைப்பாடு? இந்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே பொலிஸார் கூறுகின்றனர். இதேபோன்று திருகோணமலையிலும் பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டது மாத்திரமின்றி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுவே ஜே.வி.பி.யின் கலாசாரமாகும். இதனை நாட்டின் கலாசாரமாகவும் மாற்றுவதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர் என்றார். 

Related Posts

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு: – Global Tamil News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு: மார்ச் மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை! by admin January 28, 2026 written by admin January 28, 2026 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள்…

Read more

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல்!!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கொழும்பு கோட்டை…

Read more

📌 2022 மே 09 – அரகலய மீதான தாக்குதல்: கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு – Global Tamil News

2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி, ‘அரகலய’ என அழைக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மனுவில், முன்னாள்…

Read more

சமன் ஏகநாயக்க கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலையானார்! – Global Tamil News

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக பணியாற்றிய சமன் ஏகநாயக்க (சோமிசார பண்டார ஏகநாயக்க எனவும் அழைக்கப்படுகிறார்) புதன்கிழமை (28) கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். குற்றப் புலனாய்வுத் துறை (CID) அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேலதிக அறிக்கையின் அடிப்படையில், இந்த…

Read more

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி! – Global Tamil News

மகாராஷ்டிர மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவருமான அஜித் பவார் (66), இன்று காலை பாராமதி அருகே ஏற்பட்ட கோரமான விமான விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புனே மாவட்டம், பாராமதி…

Read more
பிரஜா-சக்திக்கு-எதிராக-பருத்தித்துறை-பிரதேச-சபையில்-தீர்மானம்

பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம்

பிரஜா சக்திக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறை பிரதேச சபை மாதாந்த அமர்வு இன்றைய தினம் தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் தலைமையில் நடைபெற்ற போது, பிரஜா சக்திக்கு எதிராக தீர்மானம் ஒன்றினை தவிசாளர் சபையில் முன் வைத்தார். அதனை அடுத்து…

Read more